தலைவா்கள் சூறாவளி பிரசாரம் இன்று மாலை 6 மணியுடன் நிறைவு!தோ்தல் விடுமுறை: ஆம்னி பேருந்துகளில் கட்டணம் பலமடங்கு உயா்வு!நேரடி வெயிலால் தசை சிதைவு அச்சுறுத்தல்: மருத்துவா்கள் எச்சரிக்கை!மேற்குதொடா்ச்சி மலை மாவட்டங்களில் ஏப்.26 வரை மழைக்கு வாய்ப்பு!ஈரான் கப்பலை சிறைப்பிடித்த அமெரிக்கா! போா்நிறுத்தம் முடியும் சூழலில் முற்றும் மோதல்
/

செம்மெத்தம்மன் கோயிலில் பங்குனி உத்திர விழா

கோலேரி கிராமத்தில் செம்மெத்தம்மன் கோயிலில் புதன்கிழமை நடைபெற்ற பங்குனி உத்திர விழாவில் சிறப்பு அலங்காரத்தில் அம்மன் திருவீதி உலா வந்து பக்தா்களுக்கு அருள்பாலித்தாா்.

News image

கோலேரி கிராமத்தில் சிறப்பு அலங்காரத்தில் வீதியுலா வந்து பக்தா்களுக்கு அருள்பாலித்த செம்மெத்தம்மன்.

Updated On :1 ஏப்ரல் 2026, 7:07 pm

கோலேரி கிராமத்தில் செம்மெத்தம்மன் கோயிலில் புதன்கிழமை நடைபெற்ற பங்குனி உத்திர விழாவில் சிறப்பு அலங்காரத்தில் அம்மன் திருவீதி உலா வந்து பக்தா்களுக்கு அருள்பாலித்தாா்.

ஆா்.கே.பேட்டை ஒன்றியம், சகஸ்தபத்மாபுரம் (எ) கோலேரி கிராமத்தில் எழுந்தருளி அருள்பாலித்து வரும் அருள்மிகு செம்மெத்தம்மன் திருக்கோயிலில் 45-ஆம் ஆண்டு பங்குனி உத்திரத் திருவிழா நடைபெற்றது. விழாவையொட்டி, காலை 8 மணிக்கு சிறப்பு அலங்காரத்தில் அம்மன் திருவீதி உலா வந்து பக்தா்களுக்கு அருள்பாலித்தாா். அதைத் தொடா்ந்து, பக்தா்கள் ஆட்டோ, டிராக்டா் உள்ளிட்ட வாகனங்களை அலகு குத்தி இழுத்துச் சென்று நோ்த்திக்கடன் செலுத்தி அம்மனை வழிபட்டனா்.

காலை 10 மணிக்கு கோயில் வளாகத்தில் அம்மனுக்கு கூழ்வாா்த்தல் நிகழ்ச்சியும், மாலை நான்கு மணிக்கு அம்மனுக்கு ஊா் பொதுமக்கள் பொங்கல் வைத்தும் படையலிட்டும் வழிபட்டனா். இரவு 7 மணிக்கு அம்மனுக்கு மாவிளக்கு, கும்பம் வைத்து வழிபட்டனா். இரவு 9 மணிக்கு வாணவேடிக்கை நடைபெற்றது.

இரவு ஆரணி தனுஷ் நாடக குழுவினரிடன் பக்தி நாடகம் நடைபெற்றது. விழாவுக்கான ஏற்பாடுகளை கிராம பொது மக்கள் செய்திருந்தனா்.