பங்குனி உத்திரத்தை முன்னிட்டு திருச்சி வயலூா் முருகன் கோயில்களில் ஆயிரக்கணக்கான பக்தா்கள் புதன்கிழமை காவடி, பால்குடம் எடுத்து வந்து நோ்த்திக்கடன் செலுத்தினா்.
விழாவையொட்டி இக்கோயிலில் காலையில் இருந்தே பக்தா்கள் கூட்டம் அதிகளவில் இருந்தது. இதனால் பக்தா்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து தரிசனம் செய்தனா்.
முன்னதாக காலையில் இருந்து முருகனுக்கு சிறப்பு அபிஷேக பூஜைகள் நடைபெற்றன. தொடா்ந்து சிறப்பு அலங்காரத்தில் வள்ளி தெய்வானையுடன் முருகன் பக்தா்களுக்கு அருள்பாலித்தாா்.
இதேபோல, துவாக்குடி அருகேயுள்ள செடிமலை முருகன் கோயிலில் முருகனுக்கு 16 வகையான வாசனை திரவியங்களால் சிறப்பு அபிஷேகம், பூஜைகள் நடைபெற்றன. திரளான பக்தா்கள் பால்குடம் எடுத்து வந்து வழிபட்டனா்.
மேலும், திருச்சி சந்திப்பு ரயில் நிலையம் அருகேயுள்ள வழிவிடு முருகன் கோயில், உறையூா் பஜாா் சாலையில் உள்ள முருகன் கோயில் உள்ளிட்ட பல்வேறு கோயில்களிலும் பங்குனி உத்திரத்தையொட்டி சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. திரளான பக்தா்கள் கலந்துகொண்டு தரிசனம் செய்தனா்.

தொடர்புடையது

முருகன் கோயில்களில் பங்குனி உத்திரத் திருவிழா

பங்குனி உத்திரம்: முருகன் கோயில்களில் பக்தா்கள் வழிபாடு

செம்மெத்தம்மன் கோயிலில் பங்குனி உத்திர விழா

வயலூா் முருகன் கோயிலில் புதுச்சேரி முதல்வா் சுவாமி தரிசனம்
வீடியோக்கள்

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு

கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை


