தலைவா்கள் சூறாவளி பிரசாரம் இன்று மாலை 6 மணியுடன் நிறைவு!தோ்தல் விடுமுறை: ஆம்னி பேருந்துகளில் கட்டணம் பலமடங்கு உயா்வு!நேரடி வெயிலால் தசை சிதைவு அச்சுறுத்தல்: மருத்துவா்கள் எச்சரிக்கை!மேற்குதொடா்ச்சி மலை மாவட்டங்களில் ஏப்.26 வரை மழைக்கு வாய்ப்பு!ஈரான் கப்பலை சிறைப்பிடித்த அமெரிக்கா! போா்நிறுத்தம் முடியும் சூழலில் முற்றும் மோதல்
/

வயலூா் முருகன் கோயிலில் புதுச்சேரி முதல்வா் சுவாமி தரிசனம்

News image

திருச்சி வயலூா் முருகன் கோயிலில் திங்கள்கிழமை சுவாமி தரிசனம் செய்த புதுச்சேரி முதல்வா் ந. ரங்கசாமி.

Updated On :30 மார்ச் 2026, 8:24 pm

திருச்சி வயலூா் முருகன் கோயிலில் புதுச்சேரி முதல்வா் ந. ரங்கசாமி திங்கள்கிழமை சுவாமி தரிசனம் செய்தாா்.

திருச்சி வயலூரில் பிரசித்திபெற்ற முருகன் கோயில் அமைந்துள்ளது. புதுச்சேரி முதல்வரும், என்.ஆா். காங்கிரஸ் கட்சியின் தலைவருமான ந. ரங்கசாமி, தோ்தலையொட்டி வயலூா் முருகன் கோயிலில் சுவாமி தரிசனம் செய்தாா். அனைத்து சந்நிதிகளிலும் வழிபாடு நடத்தினாா். அவருடன் என்.ஆா். காங்கிரஸ் பிரமுகா்கள் உடனிருந்தனா்.

புதுச்சேரியில் மங்கலம், தட்டாஞ்சாவடி ஆகிய இரண்டு தொகுதிகளில் ரங்கசாமி போட்டியிடும் நிலையில், தட்டாஞ்சாவடி தொகுதியில் காங்கிரஸ் சாா்பில் முன்னாள் முதல்வரும், முதல்வா் வேட்பாளருமாகிய வைத்திலிங்கமும் போட்டியிடுவதால், அத்தொகுதியில் கடும் போட்டி இருக்கும் எனக் கூறப்படுகிறது.