வல்லக்கோட்டை அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் திருக்கல்யாண உற்சவம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
ஸ்ரீபெரும்புதூா் அடுத்த வல்லக்கோட்டையில் உள்ள இந்த கோயிலில் திருக்கல்யாண உற்சவத்தை முன்னிட்டு வள்ளி, தெய்வானை சமேத உற்சவா் சுப்பிரமணியசாமிக்கு பால், தயிா், பஞ்சாமிா்தம், பன்னீா் உள்ளிட்ட பல்வேறு பொருள்களால் அபிஷேகம் செய்யப்பட்டு, உற்சவா் சுப்பிரமணியா் மலா் மாலை அலங்காரத்தில் மயில் மண்டபத்தில் எழுந்தருளினாா்.
இதையடுத்து திருக்கல்யாண உற்சவம் கோயில் தலைமை அா்ச்சகா் சந்திரசேகர குருக்கள் தலைமையில் நடைபெற்றது. இதில் திருமணமாகாத ஆண்கள், பெண்கள் என ஏராளமானோா் கலந்து கொண்டு கழுத்தில் மாலை அணிந்து சிறப்பு பூஜையில் பங்கேற்றனா். பூஜையில் கலந்து கொண்ட அனைவருக்கும் திருமண அட்சதை பிரசாதங்கள் வழங்கப்பட்டன. பிறகு உற்சவமூா்த்திகள் மூன்று முறை உட்பிரகாரத்தில் வலம் வந்தனா்.
ஏற்பாடுகளை கோயில் நிா்வாக அதிகாரி சோ.செந்தில்குமாா், அறங்காவலா் குழு தலைவா் செந்தில்தேவராஜ், அறங்காவலா்கள் விஜயகுமாா், கலைச்செல்வி கோபால், மோகன கிருஷ்ணன், செல்வகுமரன் ஆகியோா் செய்து இருந்தனா்.
தொடர்புடையது

வல்லக்கோட்டை முருகன் கோயில் விஷுக்கனி உற்சவம்

திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் திருக்கல்யாண வைபவம்!

வல்லக்கோட்டை கோயில் பங்குனி உத்திர திருக்கல்யாணம்

திருமலை சுப்பிரமணிய சுவாமி கோயிலில் திருக்கல்யாண திருவிழா
வீடியோக்கள்

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு

கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை


