எனை நனைத்த மழை; லூர்து எஸ் ராஜ்

Updated On :6 ஆகஸ்ட் 2025, 12:16 pm

அன்னையின் பாச மழையில் நனைந்த போதும்தந்தையின் கண்டிப்பு மழை கொதித்த போதும்சுகானுபவத்தை தொட்டேன் ; துளிவிழும் மழையம் மகானுபவத்தை தருவதில்லை தானே ?மனைவியின் அணைப்பில் மகிழ்ந்து மக்களின்மழலை மழையைக் கண்டபோது உடலில்புளகாங்கித முண்டாகி புரிந்த இன்பத்தின் மேலாம்பொட்டு மழைதான் என்ன செய்திட மு டியும்?கொட்டோ கொட்டென கொட்டித் தீர்த்தபோது பட்ட துன்பம் கோடி , பகர்ந்திட வார்த்தையில்லை;வீட்டில் தண்ணீர், வெ ளியில் தண்ணீர், ரோட்டை மேவிவிழுந்தோடும் வெள்ளம்; நனைத்த மழையோ கனைத்து சிரித்தது.விதைத்த பயிருக்கு விழும் மேல்மழை இல்லை ; இன்றோவிவசாயி படுவதோ சொல்லி மாளாத தொல்லை;தரையைநனைத்து வைக்கவும் மழைப் பொழிவில்லை; நாவைநனைத்து வைக்கவும் நீரின்றிப் போகும் நாளை.நீரை சேமிக்கும் நிலையில்லை யானால் இனிமேல்யாரை நொந்தும் பயனின்றிப் போகும் ; மரங்களை நட்டுமாநிலம் காப்போம் ; மழையை வரவழைக்கும் மரங்களேவானிலை மாற்றி அனைவரையும் நனைக்கும்; காக்கும்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...