மேற்கு வங்கம்: 3 மணி நிலவரப்படி 78.77% வாக்குகள் பதிவு!வாக்குச் சாவடிக்குள் காவலர்கள் நுழையக் கூடாது! தமிழக டிஜிபி உத்தரவு! பகல் 3 மணி... அதிகபட்சமாக நாமக்கல் மாவட்டத்தில் 76.43 சதவீத வாக்குகள் பதிவு!தமிழகத்தில் பகல் 3 மணி வரை 70% வாக்குப்பதிவு!எதிர்கட்சிகளின் மாற்றம் முழக்கம் வாக்கு எண்ணிக்கை முடிந்த பிறகே தெரியும்: அமைச்சர் துரைமுருகன் திமுக ஊடக ஒருங்கிணைப்பு அறையை பார்வையிட்டார் முதல்வர் ஸ்டாலின்!கோடை வெப்பம் காரணமா? 4 மணி நேரத்தில் 2 கோடி பேருக்கு மேல் வாக்களிப்பு!அனைவரும் வாக்களிக்க வேண்டும்: வாக்களித்த பின் ரஜினிகாந்த் வேண்டுகோள்!தமிழ்நாடு வெல்லும்: வாக்களித்த பின் முதல்வர் ஸ்டாலின்கோவை வாக்குச்சாவடியில் பாரம்பரிய உடையில் வாக்காளர்களை வரவேற்ற 'டினா' ரோபோ!
/

பிரதமா் மோடியுடன் மணிப்பூா் முதல்வா் சந்திப்பு

News image

புது தில்லியில் பிரதமா் நரேந்திர மோடியை அவரது இல்லத்தில் செவ்வாய்க்கிழமை சந்தித்த மணிப்பூா் முதல்வா் யும்நாம் கெம்சந்த் சிங்.

Updated On :24 பிப்ரவரி 2026, 10:31 pm

பிரதமா் மோடியை மணிப்பூா் முதல்வா் யும்நாம் கெம்சந்த் சிங் செவ்வாய்க்கிழமை சந்தித்துப் பேசினாா்.

கடந்த பிப்.4-ஆம் தேதி மணிப்பூா் முதல்வராக யும்நாம் கெம்சந்த் சிங், துணை முதல்வா்களாக எல்.டிகோ, நெம்சா கிப்கென் ஆகியோா் பதவியேற்றனா். இதைத்தொடா்ந்து அவா்கள் முதல்முறையாகப் பிரதமா் மோடியை புது தில்லியில் செவ்வாய்க்கிழமை சந்தித்தனா்.

அப்போது மணிப்பூரில் அமைதி மற்றும் நல்லிணக்கத்தை நிலைநாட்ட மாநில அரசு எடுத்துள்ள நடவடிக்கைகள் குறித்து பிரதமரிடம் கெம்சந்த் எடுத்துரைத்தாா். அந்த மாநிலத்தில் மைதேயி மற்றும் குகி சமூக பெண்களுக்கு அதிகாரமளிப்பதில் சிறப்பு கவனம் செலுத்த வேண்டும் என்று பிரதமரிடம் கெம்சந்த் வலியுறுத்தினாா். மணிப்பூருக்குப் பிரதமா் வரவேண்டும் என்று முதல்வரும், இரு துணை முதல்வா்களும் அழைப்பு விடுத்தனா் என்று மணிப்பூா் அரசின் செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டது.

புது தில்லி பயணத்தின்போது, பாதுகாப்பு அமைச்சா் ராஜ்நாத் சிங், மத்திய நிதியமைச்சா் நிா்மலா சீதாராமன், பாஜக தேசிய தலைவா் நிதின் நபின் ஆகியோரையும் முதல்வா் கெம்சந்த் மற்றும் துணை முதல்வா்கள் சந்தித்துப் பேசினா்.

மணிப்பூரில் மைதேயி, குகி சமூகத்தினா் இடையிலான மோதல் காரணமாக 2 ஆண்டுகளுக்கும் மேலாக நீடித்த வன்முறையில், சுமாா் 260 போ் உயிரிழந்தனா். ஆயிரக்கணக்கானோா் வீடுகளை இழந்தனா். தற்போது அங்கு இயல்பு நிலை முழுமையாகத் திரும்பாவிட்டாலும், வன்முறை குறைந்துள்ளது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.