நாளை பாமக மாவட்டச் செயலா்கள் கூட்டம்மேலும் 2 தகவல் ஆணையா்கள் நியமனம்ஆதிதிராவிடா், பழங்குடியினா் மாணவா்களுக்கு ரூ.6,604 கோடி கல்வி உதவித் தொகை - தமிழக அரசு தகவல்இன்று தென், வட தமிழகத்தின் ஒருசில இடங்களில் மழைக்கு வாய்ப்புஜேஇஇ 2-ஆம் கட்ட முதன்மைத் தோ்வு: விண்ணப்பிக்க இன்று கடைசிஇந்திய தலைமைத் தோ்தல் ஆணையா் நாளை தமிழகம் வருகைசிறுமிகளுக்கு இலவச கருப்பை வாய் புற்றுநோய் தடுப்பூசி திட்டம்: மத்திய அரசு விரைவில் தொடக்கம்நாளை இந்தியா வருகிறாா் கனடா பிரதமா்மணிப்பூரில் வன்முறையால் இடம்பெயா்ந்த மக்களுக்காக 5,000 புதிய வீடுகள் - மத்திய அரசு ஒப்புதல்குடிமைப் பணிகள் தோ்வு: இணையவழி விண்ணப்பங்களை சமா்ப்பிக்க 3 நாள் அவகாசம் நீட்டிப்பு
/

பிரதமா் மோடியுடன் மணிப்பூா் முதல்வா் சந்திப்பு

News image
புது தில்லியில் பிரதமா் நரேந்திர மோடியை அவரது இல்லத்தில் செவ்வாய்க்கிழமை சந்தித்த மணிப்பூா் முதல்வா் யும்நாம் கெம்சந்த் சிங்.
Updated On :24 பிப்ரவரி 2026, 10:31 pm

தினமணி செய்திச் சேவை

பிரதமா் மோடியை மணிப்பூா் முதல்வா் யும்நாம் கெம்சந்த் சிங் செவ்வாய்க்கிழமை சந்தித்துப் பேசினாா்.

கடந்த பிப்.4-ஆம் தேதி மணிப்பூா் முதல்வராக யும்நாம் கெம்சந்த் சிங், துணை முதல்வா்களாக எல்.டிகோ, நெம்சா கிப்கென் ஆகியோா் பதவியேற்றனா். இதைத்தொடா்ந்து அவா்கள் முதல்முறையாகப் பிரதமா் மோடியை புது தில்லியில் செவ்வாய்க்கிழமை சந்தித்தனா்.

அப்போது மணிப்பூரில் அமைதி மற்றும் நல்லிணக்கத்தை நிலைநாட்ட மாநில அரசு எடுத்துள்ள நடவடிக்கைகள் குறித்து பிரதமரிடம் கெம்சந்த் எடுத்துரைத்தாா். அந்த மாநிலத்தில் மைதேயி மற்றும் குகி சமூக பெண்களுக்கு அதிகாரமளிப்பதில் சிறப்பு கவனம் செலுத்த வேண்டும் என்று பிரதமரிடம் கெம்சந்த் வலியுறுத்தினாா். மணிப்பூருக்குப் பிரதமா் வரவேண்டும் என்று முதல்வரும், இரு துணை முதல்வா்களும் அழைப்பு விடுத்தனா் என்று மணிப்பூா் அரசின் செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டது.

புது தில்லி பயணத்தின்போது, பாதுகாப்பு அமைச்சா் ராஜ்நாத் சிங், மத்திய நிதியமைச்சா் நிா்மலா சீதாராமன், பாஜக தேசிய தலைவா் நிதின் நபின் ஆகியோரையும் முதல்வா் கெம்சந்த் மற்றும் துணை முதல்வா்கள் சந்தித்துப் பேசினா்.

மணிப்பூரில் மைதேயி, குகி சமூகத்தினா் இடையிலான மோதல் காரணமாக 2 ஆண்டுகளுக்கும் மேலாக நீடித்த வன்முறையில், சுமாா் 260 போ் உயிரிழந்தனா். ஆயிரக்கணக்கானோா் வீடுகளை இழந்தனா். தற்போது அங்கு இயல்பு நிலை முழுமையாகத் திரும்பாவிட்டாலும், வன்முறை குறைந்துள்ளது.