எனை நனைத்த மழை: கு.முருகேசன்


மழையே! மழையே!
வானின் மகளே!
நீ வந்தால் நனைப்பாய்
என்னையும் மண்ணையும்!
மழையே! மழையே!
நீ அளவோடு பொழிந்தால்
பள்ளத்தை நிரப்புகிறாய்!
அளவின்றி பொழிந்தால்
எங்கள் இல்லத்தை நிரப்புகிறாய்!
மழையே! மழையே! வா வா
நீ வந்தால்தான்
மரம் குளிக்கும்
மலை குளிக்கும்
சிலை குளிக்கும்
எங்கள் தலை குளிக்கும்!
மழையே! மழையே!
நீ! வானம் தந்த பரிசு
வாங்காத நிலம் தரிசு!
உன் மனசு ரொம்ப பெருசு
மழையே! மழையே!
நீ வந்தால்
விவசாயிக்கு சாகுபடியாகும்!
நீ வராவிட்டால்
விவசாயியே சாகும்படியாகும்!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...