கட்சியின் பெயரை மட்டும் விரைவில் அறிவிக்கிறேன்: என் முயற்சியில் எந்தவித மாற்றத்திற்கும் இடமில்லை - சசிகலாராமநாதபுரத்தில் புதிய கட்சி தொடங்கினார் சசிகலா : அண்ணா, எம்ஜிஆர், ஜெயலலிதா படங்களுடன் கொடி அறிமுகம்9 ஆண்டுகளாக அமைதியாக இருந்ததைப்போல இனியும் இருக்க முடியாது : சசிகலாசென்னையில் ஆயிரம் விளக்கு, தி.நகர், வேளச்சேரி தொகுதிகளில் போட்டியிட பாஜக விருப்பம் எனத் தகவல்சட்டப்பேரவைத் தேர்தலையொட்டி அதிமுகவிடம் 72 தொகுதிகள் அடங்கிய பட்டியலை பாஜக வழங்கியதுஅதிமுக ஆட்சிக்கு வராது என்ற நம்பிக்கையில் அறிவிப்பை வெளியிடுகிறார் எடப்பாடி பழனிசாமி : திருமாவளவன்பயணிகள் வசதிக்காக 26 குறுகிய தூர மின்சார ரயில்கள் இயக்க முடிவு : தெற்கு ரயில்வே
/

எனை நனைத்த மழை:  கு.முருகேசன்

News image
Updated On :6 ஆகஸ்ட் 2025, 12:16 pm

கவிதைமணி

மழையே! மழையே!
வானின் மகளே!
நீ வந்தால் நனைப்பாய்
என்னையும் மண்ணையும்!

மழையே! மழையே!
நீ அளவோடு பொழிந்தால்
பள்ளத்தை நிரப்புகிறாய்!
அளவின்றி பொழிந்தால்
எங்கள் இல்லத்தை நிரப்புகிறாய்!

மழையே! மழையே!  வா வா
நீ வந்தால்தான்
 மரம் குளிக்கும்
மலை குளிக்கும்
சிலை குளிக்கும்
எங்கள் தலை குளிக்கும்!

மழையே! மழையே!
நீ! வானம் தந்த பரிசு
வாங்காத நிலம் தரிசு!
உன் மனசு ரொம்ப பெருசு

மழையே! மழையே!
நீ வந்தால்
விவசாயிக்கு சாகுபடியாகும்!
நீ வராவிட்டால்
விவசாயியே சாகும்படியாகும்!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.