கட்சியின் பெயரை மட்டும் விரைவில் அறிவிக்கிறேன்: என் முயற்சியில் எந்தவித மாற்றத்திற்கும் இடமில்லை - சசிகலாராமநாதபுரத்தில் புதிய கட்சி தொடங்கினார் சசிகலா : அண்ணா, எம்ஜிஆர், ஜெயலலிதா படங்களுடன் கொடி அறிமுகம்9 ஆண்டுகளாக அமைதியாக இருந்ததைப்போல இனியும் இருக்க முடியாது : சசிகலாசென்னையில் ஆயிரம் விளக்கு, தி.நகர், வேளச்சேரி தொகுதிகளில் போட்டியிட பாஜக விருப்பம் எனத் தகவல்சட்டப்பேரவைத் தேர்தலையொட்டி அதிமுகவிடம் 72 தொகுதிகள் அடங்கிய பட்டியலை பாஜக வழங்கியதுஅதிமுக ஆட்சிக்கு வராது என்ற நம்பிக்கையில் அறிவிப்பை வெளியிடுகிறார் எடப்பாடி பழனிசாமி : திருமாவளவன்பயணிகள் வசதிக்காக 26 குறுகிய தூர மின்சார ரயில்கள் இயக்க முடிவு : தெற்கு ரயில்வே
/

எனை நனைத்த மழை ! கவிஞர் இரா .இரவி !

News image
Updated On :6 ஆகஸ்ட் 2025, 12:16 pm

கவிதைமணி

வானில் இருந்து வரும் திரவ அமுதம் மழை ! 
வயல்களைக் குளிர்வித்து விளைவிக்கும் மழை ! 

துளித்துளியாக விழும் பெருவெள்ளம் மழை ! 
துன்பம் மறக்க வைத்து இன்பம் தரும் மழை ! 

கடலிலிருந்துப் பயணித்து மேகமாகும்  மழை! 
கனிந்து மண்ணிற்கு வந்து விழும் மழை ! 

வருடம்   தோறும் சீராகப் பெய்ய வேண்டும் மழை ! 
வளங்கள் பெரும் வளர்ச்சிப் பெருக்கும்  மழை ! 

மயில்கள் தொகை விரித்து ஆடினால் மழை ! 
மண் செழிக்கும் மகசூல் பெருக்கும் மழை ! 

வருமுன்னே ஆராய்ந்து சொல்கின்றனர் மழை ! 
வஞ்சியர்கள் விரும்பி மகிழ்ந்திடும் மழை ! 

அளவோடு  பெய்தால் நலமாக  வாழவைக்கும் மழை ! 
அளவின்றிப் பெய்தால் இன்னல் தரும் மழை ! 

புவி வெப்பமயமாதலைத் தடுத்திடும் மழை !  
புவியின் விளைச்சலை வளர்த்திடும் மழை ! 

காதலர்களின்  ஊடல் தீர்த்து வைக்கும் மழை ! 
காதலர்களின் கூடல் இணைத்து வைக்கும் மழை ! 

ஓரமாக ஒதுங்கி நின்ற எனை நனைத்தது மழை ! 
உடன் இறங்கி மழையில் நனைந்து மகிழ்ந்தேன் ! 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.