நல்லகண்ணு உடலுக்கு ரஜினி அஞ்சலி! நல்லகண்ணு உடலுக்கு சூர்யா, சிவகார்த்திகேயன் அஞ்சலி!இஸ்ரேல், பாலஸ்தீனத்தின் உயரிய விருது பெற்ற ஒரே தலைவர் மோடி!பிரதமா் மோடி பிப்.28-இல் தமிழகம் வருகை!இலவசங்களுக்கு எதிரான மனு: அவசரமாக விசாரிக்க உச்சநீதிமன்றம் மறுப்பு
/

கோடை மழை: பா.ஜெய்குமார்

News image
Updated On :6 ஆகஸ்ட் 2025, 12:20 pm

கவிதைமணி

வறண்டு போன மணற்பரப்பாய்
நீ(ரி)யின்றி வாடிப்போனதொரு (வ)மனம் ...
வசந்த மில்லா வாழ்க்கை
சிறப்பில்லாதொரு தனிமை ...
சிந்தனைக்குள் உலவும்
சிறைபடா சிறு உணர்வுகள் ....
மீளாத மாளாத நினைவுகள்
சூழவொரு சுதந்திரமுமில்லை ....
வேர் விட்ட மரமாய் இருந்தும்
கிளைகளில் உறவாடும்
இலைகளுக்கும்  உயிர்ப்புகளில்லை ....
அவ்வேளை பாலைவனச் சோலைக்குள்
தஞ்சம் புகும் பெருமழையாய்
வறண்டு போனதொரு வாழ்க்கை
துளிர்விட கோடைமழையாய்
நீ எப்போதும் வேண்டும் வேண்டும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.