இஸ்ரேலின் சொட்டுநீர் பாசனம் இந்தியாவிலும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது: இஸ்ரேல் நாடாளுமன்றத்தில் மோடி பேச்சு இந்திய கலாசாரத்தில் யூதர்களின் பங்கு முக்கியமானது : இஸ்ரேல் நாடாளுமன்றத்தில் மோடி பேச்சுஇஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு உடனான சந்திப்பு மிகச்சிறப்பானதாக இருந்தது: பிரதமர் மோடிஅனைவராலும் மதிக்கப்பட்டவர் நல்லகண்ணு : பிரதமர் இரங்கல்நல்லகண்ணு உடலுக்கு முதல்வர் மு.க. ஸ்டாலின் அஞ்சலி!டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 1 காசு குறைந்து ரூ. 90.96 ஆக நிறைவு!நல்லகண்ணு உடலுக்கு முழு அரசு மரியாதை! முதல்வர் அறிவிப்பு!
/

பச்சை நிலம்: பேராசிரியர் கவிஞர் பு. மகேந்திரன்

News image
Updated On :6 ஆகஸ்ட் 2025, 12:20 pm

கவிதைமணி

மனிதன் இன்பமாய் இருக்க
இயற்கையைக் காப்போம்.
சூரியனை எழுப்புகின்ற சூரியன்
சுறுசுறுப்பில் கடிகாரத்தில் வீரியன்
நீரினைப் போல் நெஞ்சம் உடையவன்
நிலத்தைக் கவியாக்கிப் படைப்பவன்
வேறினைப் போல் மண்ணுக்கு இருப்பவன்
வெற்று உடலால் உழவன் உழைப்பான்.

நம் பசிக்கு அன்னமிடும் தாயவன்
கண் போல் மண் தாயைக் காப்பவன்
கடமையிலே தன் உடலைத் தேய்ப்பவன்
மண் மேல் மகிழ்ச்சி தனைப் பொங்குவான்
மனிதர் வாழ மண்ணை மேல் தாங்குவான்
மாயையான இவ்வுலகில் மதிகெட்ட நம் முன்னோர்கள்
வெறும் கல்லையும் மண்ணையும் கடவுள் என்றான்
இயற்கையினை இறைவனாக்கி என்னையும் வணங்க வைத்தான்

எது இல்லை இயற்கை
அது வெல்லாம் கடவுளோ
இயற்கை அது இயற்கை
இயற்கையை தெய்வமாய் வணங்குவோம்
இமயம் முதல் குமரி வரை
இயற்கையைக் காப்போம்
இறைவனை நேசிப்போம்
இனிமையாய் வாழ்வோம்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.