பச்சை நிலம்: சீர்காழி .ஆர் .சீதாராமன்


" தேடினேன் தேடுகிறேன்
தேடுவேன் ஆனாலும்
இன்னும் தென்படவில்லை
பச்சை நிலம் "
"காணி நிலம் வேண்டும்
என்றான் பாரதி அன்று
காணி பச்சை நிலம்
கேட்பான் இருந்திருந்தால்
இன்று "
" வறண்ட இருண்ட
நிலத்தில் வீடும் கடையும்
மாளிகையும் வந்து
புகுந்த போது பச்சைநிலம்
கேள்விக் குறியே "
" பச்சை நிலம் பாதுகாக்க
வேண்டிய பெட்டகம்
எதிர்கால தேடல்
பொக்கிஷம் மாமருந்து "
" வறண்ட நிலத்தில்
பச்சை நிறம் பூசிப்
பார்க்கும் நிலை வருமோ
பசுமை நினைவும்
நிறம் மாறிவிடுமோ ?"
" மனித சக்திகள் விஞ்ஞான
வளர்ச்சிகள் இயற்கையின்
துணையோடு பச்சைநிலம்
பட்டொளிவீசி பறக்க
முயற்சிப்போம் எந்நாளும் "
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...