நீதியைத்தேடி : அருள் .க. இராபர்ட்


தேரா மன்னனை தேறிட வைத்து
தெளிந்தது ஓர் காலம்
போராடாமல் நடுமணி அடித்து
பெற்றது ஓர் காலம்
புறாவுக்காக தொடைக்கறி கொடுத்து
பூரித்ததோர் காலம்
கரவாது நிறைவாய் மக்களிடையே
கனிந்தது ஓர் காலம்
காசும் பணமும் கையில் இருப்போர்
களித்திடும் இக்காலம்
பேசும்பரிசும் பதவியும் நிதியும்
பேரமும் இக்காலம்
நீசர் கைகளில் ஆட்சி இருப்பதால்
நீதியைக் காணவில்லை
தேசத்தின் வீதியில் நீதியைத் தேடி
திகைக்கிறோம் இக்காலம்
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...