டி20 உலக கோப்பையில் இன்று... இந்திய அணியை 76 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி தென்னாப்பிரிக்கா அபாரம்!தயாரிப்பாளர் சங்கத் தேர்தலில் தலைவர் பதவிக்கு போட்டியிட்ட ஜி கே எம் தமிழ்குமரன் வெற்றிஆப்கானிஸ்தானில் பாகிஸ்தான் தாக்குதல்: இந்தியா கண்டனம்!சென்னை: முதல்வர் மு.க.ஸ்டாலினுடன் காங்கிரஸ் பொதுச் செயலாளர் கே.சி.வேணுகோபால் சந்திப்புபாகிஸ்தானிடமிருந்து போர் விமானங்கள் கொள்முதல்: சோமாலியா பேச்சுவார்த்தை‘ஆபரேசன் த்ரஷி-1’: ஜம்மு - காஷ்மீரில் மேலும் ஒரு பயங்கரவாதியின் உடல் கண்டெடுப்பு! இஸ்ரேல் நாடாளுமன்றத்தில் பிரதமர் மோடி புதன்கிழமை உரையாற்றுகிறார்ஏஐ மாநாட்டில் காங்கிரஸ் சட்டையின்றிப் போராட்டம்: “வெளிநாட்டு விருந்தினர்கள் முன் இந்தியாவுக்குத் தலைகுனிவு!” - பிரதமர் மோடி
/

நீதியைதேடி: சுந்தரம்சுப்ரமணியன்

News image
Updated On :6 ஆகஸ்ட் 2025, 12:14 pm

கவிதைமணி

கைதிகளை
காவுவாங்கும்
மரணகூடங்களாய்
சிறைகூடங்கள்!!

காதலிக்கமறுக்கும்
கன்னியருக்கோ
சாலைகள்கூட
வதைகூடங்கள்.

விலங்குகளுக்கு
உயிர்வாழ்தல், இனப்பெருக்கம்
மட்டுமேவிதி.
மனிதம்அற்ற
மாக்களுக்கோ
எவ்வழி ஆகிலும்
குவிக்கவேண்டும்
நிதி

காசுக்காகஅஞ்சாது
செய்வோமே
கொலை.
கற்பழிப்பு ,கொள்ளை
பலருக்குகைவந்த
கலை

இன்று
மெத்தப்படிக்க
வேண்டாம்.
மேனிநோக உழைக்க
வேண்டாம் - வெயிலில்
சுற்றித்திரிய
வேண்டாம்.

சுகமெதுவும்இழக்க
வேண்டாம்.
கத்தைபணமிருந்தால்
கடவுளையும்
வாங்கிடலாம்.
நீதிமட்டும்
விதிவிலக்கா?
நீங்களேசொல்லுங்கள்.

அந்தோபரிதாபம்!
அதிகாரம்
கொண்டோருக்கும்
ஆணவ
பணமுதலைகளுக்கும்
ஆசைநாயகியாய்
ஆகிப்போனாள்
நீதிதேவதைஎனும்
பேதை!

இதுபுரியாமல்
இன்னும்ஏழைகள்
நீதிதேடிஅலைவது
முடிவிலாநீண்டதொரு
பாதை!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.