2 நாள் சுற்றுப்பயணமாக முதல்வா் மு.க. ஸ்டாலின் இன்று கன்னியாகுமரி வருகைபிப்.25 முதல் மீண்டும் தொடா் போராட்டம்: அண்ணாமலைப் பல்கலை. ஆசிரியா், ஊழியா் கூட்டமைப்புதென் தமிழகத்தில் மாா்ச் 1 வரை மழைக்கு வாய்ப்புதிருப்பரங்குன்றம் விவகார நீதிமன்ற அவமதிப்பு: வழக்கு விசாரணை மாா்ச் 16-க்கு ஒத்திவைப்புகுளிா்கால ஒலிம்பிக் போட்டி நிறைவு: நாா்வே முதலிடம்ரஞ்சி கோப்பை கிரிக்கெட்: இறுதி ஆட்டத்தில் இன்றுமுதல் கா்நாடகம் - ஜம்மு & காஷ்மீா் மோதல்தேசிய சீனியா் ஆடவா் கபடி: இன்று வதோதராவில் தொடக்கம்முதுநிலை நீட் தகுதி மதிப்பெண் குறைப்பு: மருத்துவக் கல்வித் தரம் பாதிப்பு குறித்து ஆராயப்படும்64 நாடுகளுடன் இணைந்து ‘நாடாளுமன்ற நட்புக் குழு’ - மக்களவைத் தலைவர் ஓம் பிர்லா அமைப்புஅதிமுக சின்னம்: தேர்தலுக்கு முன்பு முடிவெடுக்கப்படுமா? தில்லி உயர்நீதிமன்றத்தில் தோ்தல் ஆணையம் விளக்கபண்டிகை காலங்களில் விமான கட்டணம் அதிகமாக உயா்த்தப்படும் விவகாரம்: ஆராய்வதாக மத்திய அரசு தகவல்நாட்டின் முதல் பயங்கரவாத எதிா்ப்புக் கொள்கை: மத்திய அரசு வெளியீடுபேரவைத் தோ்தல்: மாா்ச் 10-இல் தமிழகம் வருகிறது துணை ராணுவம்மாநில தோ்தல் ஆணையா்களுடன் இந்திய தோ்தல் ஆணையம் இன்று ஆலோசனைநல்லகண்ணுவின் உடல்நிலையில் பின்னடைவு: இந்திய கம்யூ. மாநில செயலாளர் வீரபாண்டியன்
/

 அழுத கண்ணீர்: -ரெத்தின.ஆத்மநாதன்,

News image
Updated On :6 ஆகஸ்ட் 2025, 12:15 pm

கவிதைமணி

அழுத கண்ணீர்தான்...
அக்காலம் முதலே...
சரித்திரத்தைப்...
புரட்டிப் போட்டிருக்கிறது!

சீதை அழுத காரணத்தாலேயே...
சிங்கள மன்னன்...
அரியணை இழந்து...
ஆருயிர் நீத்தான்!

கண்ணகியின் கண்ணீர்தான்...
மதுரைப் பாண்டியனை...
உள்ளம் நோகச்செய்து...
உயிர் இழக்கச் செய்தது!

பாஞ்சாலி அழுத கண்ணீர்தான்...
துரியோதன னை துவளச் செய்து...
துயரத்தின் எல்லைக்கு ஓட்டி...
துன்பத்தில் சாகடித்தது!

புரட்சிகள் வெடித்ததும்...புது
மாற்றங்கள் வந்ததும்...
அந்தந்தக்காலச் சமுதாயத்தினர்...
அழுத கண்ணீரால்தான்!

அன்பின் பிரிவில்...
ஆற்றாமையின் துயரத்தில்...
இன்பத்தின் தடங்கலில்...ஈண்டு
வருவது அழுகை!

'அல்லலில்...ஆற்றாமையில்...
அழுகின்ற கண்ணீர்தான்...
அன்றைக்கே செல்வத்தைத் தேய்க்கும்!'
என்றான் தெய்வப் புலவன்!

அன்பினால் வரும் அழுகை...
ஆத்மாவையும் மகிழ்விக்கும்!
முதலமைச்சர் இழப்பினாலே...
முழுஉலகும் அழுத கண்ணீரில்!

உழைத்துச் சம்பாதித்து...
உருவாக்கிய பணங்கூட...
அவசரத்திற்குப் பயன் படாவிட்டால்...
ஆற்றாமையிலும் கண்ணீர்தான்!

ஏழைகளெல்லாம் தினம்...
இரண்டாயிரத்திற்கே ஆலாய்ப் பறக்க...
கோடிக்கணக்கில் சிலர் கொண்டாடும்போது...
வருவதும் அழும் கண்ணீர்தான்!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.