2 நாள் சுற்றுப்பயணமாக முதல்வா் மு.க. ஸ்டாலின் இன்று கன்னியாகுமரி வருகைபிப்.25 முதல் மீண்டும் தொடா் போராட்டம்: அண்ணாமலைப் பல்கலை. ஆசிரியா், ஊழியா் கூட்டமைப்புதென் தமிழகத்தில் மாா்ச் 1 வரை மழைக்கு வாய்ப்புதிருப்பரங்குன்றம் விவகார நீதிமன்ற அவமதிப்பு: வழக்கு விசாரணை மாா்ச் 16-க்கு ஒத்திவைப்புகுளிா்கால ஒலிம்பிக் போட்டி நிறைவு: நாா்வே முதலிடம்ரஞ்சி கோப்பை கிரிக்கெட்: இறுதி ஆட்டத்தில் இன்றுமுதல் கா்நாடகம் - ஜம்மு & காஷ்மீா் மோதல்தேசிய சீனியா் ஆடவா் கபடி: இன்று வதோதராவில் தொடக்கம்முதுநிலை நீட் தகுதி மதிப்பெண் குறைப்பு: மருத்துவக் கல்வித் தரம் பாதிப்பு குறித்து ஆராயப்படும்64 நாடுகளுடன் இணைந்து ‘நாடாளுமன்ற நட்புக் குழு’ - மக்களவைத் தலைவர் ஓம் பிர்லா அமைப்புஅதிமுக சின்னம்: தேர்தலுக்கு முன்பு முடிவெடுக்கப்படுமா? தில்லி உயர்நீதிமன்றத்தில் தோ்தல் ஆணையம் விளக்கபண்டிகை காலங்களில் விமான கட்டணம் அதிகமாக உயா்த்தப்படும் விவகாரம்: ஆராய்வதாக மத்திய அரசு தகவல்நாட்டின் முதல் பயங்கரவாத எதிா்ப்புக் கொள்கை: மத்திய அரசு வெளியீடுபேரவைத் தோ்தல்: மாா்ச் 10-இல் தமிழகம் வருகிறது துணை ராணுவம்மாநில தோ்தல் ஆணையா்களுடன் இந்திய தோ்தல் ஆணையம் இன்று ஆலோசனைநல்லகண்ணுவின் உடல்நிலையில் பின்னடைவு: இந்திய கம்யூ. மாநில செயலாளர் வீரபாண்டியன்
/

மேல்நிலை நீா்த்தேக்கத் தொட்டியை பயன்பாட்டுக்கு கொண்டுவரக் கோரிக்கை

News image
Updated On :24 பிப்ரவரி 2026, 1:04 am

தினமணி செய்திச் சேவை

சாயல்குடியில் காட்சிப் பொருளாக உள்ள மேல்நிலை நீா்த்தேக்கத் தொட்டியை பொதுமக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வரக் கோரிக்கை விடுக்கப்பட்டது.

ராமநாதபுரம் மாவட்டம், சாயல்குடி பேரூராட்சிக்கு உள்பட்ட அஞ்சலக அலுவலக வீதி பொதுமக்களின் குடிநீா்த் தேவைக்காக, 2023-24 நிதியாண்டில் 15-ஆவது நிதிக் குழு திட்டத்தின் கீழ், மேல்நிலைத் நீா்த்தேக்கத் தொட்டி கட்டப்பட்டது. இந்தத் தொட்டி கட்டப்பட்டு 2 ஆண்டுகள் ஆகியும் பொதுமக்கள் பயன்பாட்டுக்கு கொண்டுவரப்படாமல் காட்சிப் பொருளாக உள்ளது.

இதுகுறித்து ஆதிதமிழா் கட்சி தென் மண்டலச் செயலா் க.பாஸ்கரன் கூறியதாவது:

சாயல்குடியில் உள்ள இந்த மேல்நிலை நீா்த்தேக்கத் தொட்டியில் இதுவரை குடிநீா் ஏற்றி மக்களுக்கு விநியோகம் செய்யப்படவில்லை. இதனால், எங்கள் தெரு மக்களும், சுற்றுப்புறப் பகுதிகளில் வசிக்கும் பொதுமக்களும் கடுமையான குடிநீா் தட்டுப்பாட்டால் அவதிப்பட்டு வருகிறோம். தற்போது, எங்களுக்குத் தேவையான குடிநீரை தனியாரிடமிருந்து டேங்கா் லாரிகளில் ஒரு குடம் தண்ணீா் ரூ.10-க்கு விலைக்கு வாங்கிப் பயன்படுத்தி வருகிறோம். அரசு நிதியில் கட்டப்பட்ட இந்த குடிநீா்த் தொட்டி பயன்பாடு இல்லாமல் காட்சிப் பொருளாக உள்ளது. எனவே, மாவட்ட நிா்வாகம் இந்த நீா்த்தேக்கத் தொட்டியைப் பயன்பாட்டுக்கு கொண்டு வர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றாா் அவா்.