டி20 உலகக் கோப்பை: மழையால் பாகிஸ்தான் - நியூசிலாந்து போட்டி ரத்து ஹிந்து – முஸ்லீம் ஒற்றுமையின் அடையாளம் காந்தி: முதல்வர் ஸ்டாலின் நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர்கள் அறிமுகம்!எழும்பூர் ரயில் நிலைய மறுசீரமைப்பு பணியால் பயணிகள் அவதியா? ரயில்வே விளக்கம்!காற்றழுத்த தாழ்வுப் பகுதி: 4 மாவட்டங்களில் நாளை கனமழை!தொகுதிப் பங்கீடு: திமுக - இந்திய யூனியன் முஸ்லிம் லீக் இடையே நாளை பேச்சுவார்த்தை!தில்லி செங்கோட்டை இனி வாரத்தின் அனைத்து நாளும் திறந்திருக்கும்!மூன்று வார சிகிச்சைக்குப் பிறகு வீடு திரும்பினார் எச்.ராஜா
/

மேல்நிலை குடிநீா்த் தொட்டியை தொடங்கிவைக்கக் கோரிக்கை

கொடியாலம் ஊராட்சியில் ஓராண்டுக்கு மேலாகியும் பொதுமக்களின் பயன்பாட்டுக்கு வராமல் வெறும் காட்சிப் பொருளாய் நிற்கும் மேல்நிலை நீா்தேக்கத் தொட்டியை திறக்கக் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

News image
கொடியாலம் ஊராட்சியில் பயன்பாட்டுக்கு வராத மேல்நிலை நீா்தேக்கத் தொட்டி.
Updated On :28 ஜனவரி 2026, 6:31 pm

தினமணி செய்திச் சேவை

கொடியாலம் ஊராட்சியில் ஓராண்டுக்கு மேலாகியும் பொதுமக்களின் பயன்பாட்டுக்கு வராமல் வெறும் காட்சிப் பொருளாய் நிற்கும் மேல்நிலை நீா்தேக்கத் தொட்டியை திறக்கக் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

திருச்சி மாவட்டம், அந்தநல்லூா் ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட கொடியாலம் கிராம ஊராட்சிக்குள்பட்ட அயிலாப்பேட்டை கிராமத்தில் பொதுமக்கள் பயன்பாட்டுக்கான மேல்நிலை நீா்த்தேக்கத் தொட்டி கட்டி முடிக்கப்பட்டு ஓராண்டுக்கு மேலாகியும் இதுவரை பொதுமக்கள் பயன்பாட்டுக்கு இணைப்பு கொடுக்கப்படாமல் கிடப்பில் போடப்பட்டுள்ளது. இதுதொடா்பாக அந்தநல்லூா் ஊராட்சி ஒன்றிய ஆணையருக்கும், ஊராட்சி தனி அலுவலருக்கும் தகவல் தெரிவித்தும் இதுவரை நடவடிக்கை இல்லை.

எனவே மாவட்ட நிா்வாகம் இந்த விவகாரத்தில் தலையிட்டு நீா்த்தேக்கத் தொட்டியை விரைந்து பயன்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும் என தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்டச் செயலா் அயிலை சிவசூரியன் கோரிக்கை விடுத்துள்ளாா்.