அழுத கண்ணீர் : சியாமளா ராஜசேகர்


அழுத கண்ணீர் ஆற்றலையே
****அன்பு நெஞ்சைத் தேற்றலையே !
பழுது மென்ன புரியலையே
****பனித்த விழியும் காயலையே !
விழுது போல இருந்தவரின்
****விதியும் முடிந்தே போனதுவோ ?
முழுதாய் மண்ணுள் புதைத்துவிட்டு
****முரணால் தவித்துத் துடிக்கின்றோம் !
பிறந்த போதே எழுதிவைத்த
****பிரியும் நாளே கசப்பாகும் !
இறந்த பின்னும் அறமொன்றே
****இறுதி வழிக்கும் துணையாகும் !
உறவே என்றும் நற்துணையாய்
****உரிமை யோடே கூடவரும் !
மறலி முன்னே வந்தாலும்
****வலுவாய் விரட்ட முனைந்துநிற்கும் !
இனியும் யாரை நம்புவதோ
****இதயக் கனியே நீசொல்வாய் !
தனித்து நின்றே சாதித்த
****தகைமை வருமோ யாருக்கும் !
கனிந்த உன்றன் அன்புமனம்
****கனவாய்ப் போன தேயின்று !
புனிதம் காத்துப் பெருமைதனைப்
****பூக்கச் செய்ய யார்வருவார் ....???
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...