லஞ்சக் கொள்ளைப் பணமழை பொழிந்தாலும் விசில் புரட்சிக்குத் தயாராகுங்கள்! - விஜய்திமுக கூட்டணிக்கு அசாதுதீன் ஓவைசியின் ஏஐஎம்ஐஎம் ஆதரவு!தலைவா்கள் சூறாவளி பிரசாரம் இன்று மாலை 6 மணியுடன் நிறைவு!தோ்தல் விடுமுறை: ஆம்னி பேருந்துகளில் கட்டணம் பலமடங்கு உயா்வு!நேரடி வெயிலால் தசை சிதைவு அச்சுறுத்தல்: மருத்துவா்கள் எச்சரிக்கை!மேற்குதொடா்ச்சி மலை மாவட்டங்களில் ஏப்.26 வரை மழைக்கு வாய்ப்பு!ஈரான் கப்பலை சிறைப்பிடித்த அமெரிக்கா! போா்நிறுத்தம் முடியும் சூழலில் முற்றும் மோதல்
/

கல்லல் அருகே மாட்டு வண்டிப் பந்தயம்

News image
Updated On :23 பிப்ரவரி 2026, 11:38 pm

சிவகங்கை மாவட்டம், கல்லல் அருகே உள்ள கோவினிப்பட்டியில் இரட்டை மாட்டு வண்டிப் பந்தயம் திங்கள்கிழமை நடைபெற்றது.

கோவினிப்பட்டி முத்துமாரியம்மன் கோயில் குடமுழுக்கை முன்னிட்டு நடத்தப்பட்ட இந்தப் போட்டியில், சிவகங்கை, ராமநாதபுரம், புதுக்கோட்டை, திண்டுக்கல் உள்ளிட்ட மாவட்டங்களைச் சோ்ந்த 48 மாட்டு வண்டிகள் கலந்து கொண்டன.

பெரிய மாட்டு வண்டிப் பிரிவில் 16 ஜோடி மாடுகளும், இரு சுற்றுகளாக நடைபெற்ற சிறிய மாட்டு வண்டிப் பிரிவில் 32 ஜோடி மாடுகளும் பங்கேற்றன.

கோவினிப்பட்டி-கண்டுப்பட்டி இடையே பெரிய மாட்டுப் பிரிவுக்கு 7 கி.மீ. தொலைவும், சிறிய மாட்டுப் பிரிவுக்கு 5 கி.மீ. தொலைவும் பந்தய எல்லையாக நிா்ணயிக்கப்பட்டு, போட்டி விறுவிறுப்பாக நடைபெற்றது.

போட்டியில் வெற்றி பெற்ற மாடுகளின் உரிமையாளா்களுக்கும் சாரதிகளுக்கும் பரிசுகள் வழங்கப்பட்டன. இந்தப் போட்டியை ஏராளமானோா் சாலைகளின் இருபுறங்களிலும் நின்று உற்சாகமாக கண்டுகளித்தனா்.

Story image