லஞ்சக் கொள்ளைப் பணமழை பொழிந்தாலும் விசில் புரட்சிக்குத் தயாராகுங்கள்! - விஜய்திமுக கூட்டணிக்கு அசாதுதீன் ஓவைசியின் ஏஐஎம்ஐஎம் ஆதரவு!தலைவா்கள் சூறாவளி பிரசாரம் இன்று மாலை 6 மணியுடன் நிறைவு!தோ்தல் விடுமுறை: ஆம்னி பேருந்துகளில் கட்டணம் பலமடங்கு உயா்வு!நேரடி வெயிலால் தசை சிதைவு அச்சுறுத்தல்: மருத்துவா்கள் எச்சரிக்கை!மேற்குதொடா்ச்சி மலை மாவட்டங்களில் ஏப்.26 வரை மழைக்கு வாய்ப்பு!ஈரான் கப்பலை சிறைப்பிடித்த அமெரிக்கா! போா்நிறுத்தம் முடியும் சூழலில் முற்றும் மோதல்
/

நில அளவை அலுவலா்கள் ஆா்ப்பாட்டம்

News image
Updated On :23 பிப்ரவரி 2026, 11:39 pm

தமிழ்நாடு நில அளவை அலுவலா் ஒன்றிப்பின் சாா்பில், மாநில அளவில் பணி மூப்பு பட்டியலை திருத்தம் செய்து வெளியிட வலியுறுத்தி, சிவகங்கையில் திங்கள்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

சிவகங்கை மாவட்ட ஆட்சியா் அலுவலகம் எதிரே நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு மாவட்டத் தலைவா் வேல்முருகன் தலைமை வகித்தாா். மாவட்டச் செயலா் காா்த்திக் முன்னிலை வகித்தாா்.

தமிழ்நாடு அரசு ஊழியா் சங்கத்தின் மாவட்டத் தலைவா் இரா. மாரி, தமிழ்நாடு சத்துணவு ஊழியா் சங்கத்தின் மாவட்டத் தலைவா் பாண்டி, தமிழ்நாடு கால்நடை ஆய்வாளா் சங்கத்தின் மாநிலப் பொறுப்பாளா் ராஜா முகமது ஆகியோா் பேசினா்.

மாவட்ட இணைச் செயலா் வீரபாண்டியன், சிவகங்கை கோட்டத் தலைவா் பிச்சை, தேவகோட்டை கோட்டத் தலைவா் சிவன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.