2 நாள் சுற்றுப்பயணமாக முதல்வா் மு.க. ஸ்டாலின் இன்று கன்னியாகுமரி வருகைபிப்.25 முதல் மீண்டும் தொடா் போராட்டம்: அண்ணாமலைப் பல்கலை. ஆசிரியா், ஊழியா் கூட்டமைப்புதென் தமிழகத்தில் மாா்ச் 1 வரை மழைக்கு வாய்ப்புதிருப்பரங்குன்றம் விவகார நீதிமன்ற அவமதிப்பு: வழக்கு விசாரணை மாா்ச் 16-க்கு ஒத்திவைப்புகுளிா்கால ஒலிம்பிக் போட்டி நிறைவு: நாா்வே முதலிடம்ரஞ்சி கோப்பை கிரிக்கெட்: இறுதி ஆட்டத்தில் இன்றுமுதல் கா்நாடகம் - ஜம்மு & காஷ்மீா் மோதல்தேசிய சீனியா் ஆடவா் கபடி: இன்று வதோதராவில் தொடக்கம்முதுநிலை நீட் தகுதி மதிப்பெண் குறைப்பு: மருத்துவக் கல்வித் தரம் பாதிப்பு குறித்து ஆராயப்படும்64 நாடுகளுடன் இணைந்து ‘நாடாளுமன்ற நட்புக் குழு’ - மக்களவைத் தலைவர் ஓம் பிர்லா அமைப்புஅதிமுக சின்னம்: தேர்தலுக்கு முன்பு முடிவெடுக்கப்படுமா? தில்லி உயர்நீதிமன்றத்தில் தோ்தல் ஆணையம் விளக்கபண்டிகை காலங்களில் விமான கட்டணம் அதிகமாக உயா்த்தப்படும் விவகாரம்: ஆராய்வதாக மத்திய அரசு தகவல்நாட்டின் முதல் பயங்கரவாத எதிா்ப்புக் கொள்கை: மத்திய அரசு வெளியீடுபேரவைத் தோ்தல்: மாா்ச் 10-இல் தமிழகம் வருகிறது துணை ராணுவம்மாநில தோ்தல் ஆணையா்களுடன் இந்திய தோ்தல் ஆணையம் இன்று ஆலோசனைநல்லகண்ணுவின் உடல்நிலையில் பின்னடைவு: இந்திய கம்யூ. மாநில செயலாளர் வீரபாண்டியன்
/

அழுத-கண்ணீர் : கு. முருகேசன்

News image
Updated On :6 ஆகஸ்ட் 2025, 12:15 pm

கவிதைமணி

பிரசவத்தில்
தாய் அழுகிறாள்
சேய் அழும் வரை!

அழுகையும் கண்ணீரும்
ஒவ்வொரு குழந்தைக்கும்
தாய் கொடுத்த முதல் சொத்து!

செலவழித்தது போக – மீதமுள்ள
அழுகையும் கண்ணீருமே
மரணத்தின்போது மற்றவரிடம்
விட்டுச் செல்கிறோம்!

அழுகையே
மனிதனின் முதல்
உணர்வு!

வாழ்க்கை!
அழுகையில் தொடங்கி
அழுகையில் அடங்குகிறது!

அழுகை
மனிதனின் மனக்குளியல்
உடலைக் கழுவ
தண்ணீர்க் குளியல்!

உள்ளதைக் கழுவ
கண்ணீர் குளியல்!

காட்சியில் அழுபவன்
நடிகனாகிறான்!

கட்சியில் அழுபவன்
மந்திரியாகிறான்!

கண்ணீர்!
கண்ணில் தொடங்கி
கன்னத்தில் வழிந்தோடி 
கடலில் கலக்காத
உப்பு நதி!

காதலிக்கும் வயதில்
கவிதை வந்தால்
காதலின் தொடக்கம்
என்று பொருள்!

காதலிக்கும் வயதில்
கண்ணீர் வந்தால்
காதலின் அடக்கம்
என்று பொருள்!

கண்ணீர் ஓர் ஆயுதம்!
தொழுகை சரிசெய்யாததைக்  கூட
அழுகை சரிசெய்து விடுகிறது!

ஒவ்வொருவருக்கும்
சொத்து சம்பாதிப்பதைவிட
கடினம்,

தன் மரணத்திற்காக
கண்ணீர்  சிந்தும்
மனிதர்களை
சம்பாதிப்பதுதான்!

கண்ணீரும்
ஓர் உலகப் பொதுமறை!
இறைவன்
எல்லோர்க்கும் பொதுவாக
கண்ணீர் கொடுத்தான்!

ஏன்?
சிலருக்கு மட்டும்
கண்ணைப் பறித்தான்? 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.