இந்தியாவும் மற்ற நாடுகளுடன் முன்னேற வேண்டுமானால் ஏழைகளும் பாமரர்களும் முன்னேற வேண்டும். அதனால்தான் ஏழைகளுக்கும் கல்வியைப் போதிக்குமாறு அவர் கூறினார். மதம் இதற்கு வகை செய்யும்போது தானும் வாழ்கிறது. இனி வரும் காரத்தில், பொருளாதார அம்சம் உள்ள மதம் மட்டுமே நிலைக்கும் என்று உறுதியாக நம்பினார் சுவாமிஜி. பொருளாதார மதிப்பு இருக்கின்ற மதமே வெற்றி பெறும். ஆயிரக்கணக்கான ஒரேவித மதப் பிரிவுகள் ஆதிக்கத்திற்குப் பாடுபடலாம். ஆனால் பொருளாதாரப் பிரிச்சினையைத் தீப்பவைகளே ஆதிக்கத்தைப் பெறுகின்றன என்கிறார் அவர். இவ்வாறு பொருளாதார வளர்ச்சியையும் இந்து மதத்தின் ஓர் அங்கமாக்கினார் சுவாமிஜி. இது அவரது கொடைகளில் ஒன்று ஆகும்.
மதம் என்றால், ஆன்மீகம் என்றால் இவ்வுலக வாழ்க்கையை மறுத்து, மறுவுலக வாழ்க்கையைக் கூறுவது என்ற நிலைமையைத் தமது தீர்க்கதரினத்தால் மாற்றினார் சுவாமிஜி. மதம் மனிதனது பொருளாதாரத்தை, வாழ்க்கைத்தரத்தை உயர்ந்த வேண்டும் என்று கருதினார் அவர். சுவாமிஜியின் உத்வேகத்தால் தூண்டப்பட்டு சுதந்திரம் பெற்றுவிட்டோம். ஆனால் அவர் அளித்த உத்வேகத்தால் எழுந்த இந்தியர்கள் சரியான கல்வியும் வழிகாட்டுதலும் இல்லாததால் முழுமையாக விழிப்புற வாய்ப்பின்றிப் போய்விட்டது. எனவே சுவாமிஜியின் கருத்துப்படி, இந்தியா மீண்டும் தனது பழைய பெருமையைப் பெற வேண்டும், அதற்கு அனைவருக்கும் சுவாமி விவேகானந்தர் கண்ட கல்வி அளிக்கப்பட வேண்டும். அப்போது அவர் கண்ட லட்சிய இந்தியா தோன்றும்.
இந்தக்குழப்பத்திலிருந்தும் போராட்டத்திலிருந்தும் பெருமை பொருந்தியதாக, யாராலும் வெல்லப்பட முடியாததாக, வருங்காலத்தில் ஒரு முழுமை பெற்ற இந்தியா எழுவதை என் மனக்கண்ணால் நான் காண்கிறேன்.
ஆற்றல்மிக்க இந்த இந்தியா உலகை வெற்றி கொள்ளும். அதனால்தான் ஓ இந்தியா! எனது ஆன்மீகத்தால் உலகை வெற்றி கொள்!' என்று முழங்கினார் சுவாமிஜி.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

சென்னையில் 1 மணி வரை 54.58% வாக்குப்பதிவு!

தமிழ்நாடு பேரவைத் தேர்தல் 2026! பிற்பகல் 1 மணி நிலவரம்! - நேரலை!

மேற்கு வங்க பேரவைத் தேர்தல் 2026! 41.11% வாக்குப்பதிவு- நேரலை

மேற்கு வங்கம்: பிற்பகல் 1 மணி வாக்குப்பதிவு நிலவரம்!
வீடியோக்கள்

#iranwar | போர் நிறுத்தம் நீட்டிப்பு: ஈரானிடம் டிரம்ப் கேட்பது என்ன? | Donald Trump |
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | போர்: பண்டியாவின் மும்பையா ருதுராஜின் சென்னையா? | MI vs CSK | MS Dhoni | Rohit Sharma |
தினமணி செய்திச் சேவை

வாக்குச்சாவடிகளை அடையாளம் காண புதிய முயற்சி | TN Election 2026 | Madurai | Polling booth
தினமணி செய்திச் சேவை

பணப்பட்டுவாடா புகார்களுக்கு எடுக்கப்பட்ட நடவடிக்கைகள்! அர்ச்சனா பட்நாயக் பேட்டி
இணையதளச் செய்திப் பிரிவு


