நாளை (பிப். 23), நாளை மறுநாள் (பிப். 24) மேற்குதொடர்ச்சி மலை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் மழை பெய்ய வாய்ப்பு: சென்னை வானிலை ஆய்வு மையம் நேபாளத்தில் மிதமான நிலநடுக்கம் ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாதிகளுடன் துப்பாக்கிச் சண்டை சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக கூட்டணியில் 5 தொகுதிகளை கேட்டுள்ளோம்: கே.எம்.காதர் மொகிதீன்சட்டப்பேரவைத் தேர்தல் : பிப். 26-ல் சிபிஎம் உடன் திமுக பேச்சுவார்த்தை!ஆப்கனில் பாகிஸ்தான் விமானப்படை தாக்குதல்! இந்தியா உள்ளிட்ட நாடுகள் மீதான வரியை 15% ஆக உயர்த்தினார் டிரம்ப்!
/

07.09.1934: எழுத்தாளர் சுனில் கங்கோபாத்யாய பிறந்தநாள் 

புகழ்பெற்ற வங்க  எழுத்தாளர்  சுனில் கங்கோபாத்யாய பிறந்த தினம் இன்று.

News image
Updated On :6 ஆகஸ்ட் 2025, 12:14 pm

கவியோகி வேதம்

சுனில் கங்கோபாத்யாய வங்க மொழியில் எழுதிய இந்தியாவின் புகழ் பெற்ற எழுத்தாளர்களில் ஒருவர். இவர் தற்போதைய பங்களாதேஷின் பரித்பூர் மாவட்டத்தில் உள்ள பரிச்புரா என்னும் ஊரில்  07.09.1934 அன்று பிறந்தார்.

இவர் கல்கத்தா பல்கலைக்கழகத்தில் 1954-ஆம் ஆண்டு வங்க மொழியில் முதுகலை பட்டம் பெற்றார். கல்லூரி காலத்திலேயே 'க்ரித்திபஸ்'  என்னும் கவிதைக்கான  இதழ் ஒன்றை தொடங்கி நடத்தி வந்தார். அது பல புதிய அலை  கவிஞர்களுக்கு ஒரு சிறந்த தளமாக விளங்கியது. 

அப்படித் தொடங்கிய இவரது இலக்கிய பயணத்தில் 4 சிறுகதை தொகுப்புகள், 8 நாவல்கள் மற்றும் 5 மொழிபெயர்ப்பு நூல்களையும் எழுதியுள்ளார்.    மேலும் எண்ணற்ற கவிதைகளும் இவரது ஆக்கங்களாகும். இவர் 2008-ஆம் ஆண்டு 'சாகித்ய அகாதெமி' தலைவராகவும் தேர்தெடுக்கப்பட்டார்.

எண்ணற்ற விருதுகளை பெற்றுள்ள இவர் 23.10.2012 அன்று மாரடைப்பால் காலமானார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.