டி20 உலக கோப்பையில் இன்று... இந்திய அணியை 76 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி தென்னாப்பிரிக்கா அபாரம்!தயாரிப்பாளர் சங்கத் தேர்தலில் தலைவர் பதவிக்கு போட்டியிட்ட ஜி கே எம் தமிழ்குமரன் வெற்றிஆப்கானிஸ்தானில் பாகிஸ்தான் தாக்குதல்: இந்தியா கண்டனம்!சென்னை: முதல்வர் மு.க.ஸ்டாலினுடன் காங்கிரஸ் பொதுச் செயலாளர் கே.சி.வேணுகோபால் சந்திப்புபாகிஸ்தானிடமிருந்து போர் விமானங்கள் கொள்முதல்: சோமாலியா பேச்சுவார்த்தை‘ஆபரேசன் த்ரஷி-1’: ஜம்மு - காஷ்மீரில் மேலும் ஒரு பயங்கரவாதியின் உடல் கண்டெடுப்பு! இஸ்ரேல் நாடாளுமன்றத்தில் பிரதமர் மோடி புதன்கிழமை உரையாற்றுகிறார்ஏஐ மாநாட்டில் காங்கிரஸ் சட்டையின்றிப் போராட்டம்: “வெளிநாட்டு விருந்தினர்கள் முன் இந்தியாவுக்குத் தலைகுனிவு!” - பிரதமர் மோடி
/

தவநிதி

தேவையான பொருட்கள் :
கோதுமை - 2 கிண்ணம்
வல்லாரை கீரை -  அரை கிண்ணம்
சீரகம் - 1 தேக்கரண்டி
பச்சை மிளகாய் - 2
எலுமிச்சைச் சாறு - 1 தேக்கரண்டி
சர்க்கரை - 1 தேக்கரண்டி
உப்பு - தேவைக்கேற்ப
எண்ணெய் - தேவைக்கேற்ப

செய்முறை:

வல்லாரை கீரையை  ஆய்ந்து சுத்தம் செய்து  வாணலியில் சிறிது எண்ணெய்விட்டு லேசாக வதக்கிக் கொள்ளவும். பின்னர்,  கீரையை மிக்ஸியில்  இட்டு சிறிது தண்ணீர் விட்டு விழுதாக ஒரு சுற்று சுற்றிக் கொள்ளவும். அத்துடன் எலுமிச்சைச் சாறு, சீரகம், உப்பு, சர்க்கரை, மிளகாய் சேர்த்து நன்கு அரைத்துக் கொள்ளவும். இந்த கலவையை கோதுமை மாவுடன் சேர்த்து, தண்ணீர் சேர்த்து  பூரி மாவு பதத்திற்கு பிசையவும். பின்னர், பூரி கல்லில் இட்டு தேய்த்து பூரிகளாக எண்ணெய்யில் பொரித்து எடுக்கவும். சுவையான வல்லாரை கீரை பூரி ரெடி.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.