15 ஆண்டுகளாக துரோகமிழைக்கும் திரிணமூல் காங்கிரஸ்: பிரதமர் மோடிதமிழ்நாடு பேரவைத் தேர்தல் 2026! வாக்குப்பதிவில் வரலாற்றுச் சாதனை!திமுகவை விடுவிக்க விதை விதைக்கப்பட்டுள்ளது: அன்புமணிதமிழ்நாட்டில் வாக்குப்பதிவு முடிந்தது!15 ஆண்டுகளாக துரோகமிழைக்கும் திரிணமூல் காங்கிரஸ்: பிரதமர் மோடி
/

பேபி கார்ன் (சோளக்கதிர்) மசாலா

செய்முறை: முதலில் பேபி கார்னை  சிறு சிறு துண்டுகளாக  நறுக்கி கொள்ளவும்.  கடாயில்  எண்ணெய் ஊற்றி

News image
Updated On :10 மே 2016, 7:08 am

தேவையான பொருள்கள் :

பேபி கார்ன் - 1 பாக்கெட்

வெண்ணெய்  - 100 கிராம்

பெரிய வெங்காயம் - 1

சீரகம் - 1 தேக்கரண்டி

இஞ்சி, பூண்டு பேஸ்ட் - 2  தேக்கரண்டி

மிளகாய்த் தூள் - 2   தேக்கரண்டி

மல்லித் தூள் - 12  தேக்கரண்டி

கொத்துமல்லி - சிறிதளவு

எண்ணெய் - 2  தேக்கரண்டி

உப்பு - தேவையான அளவு

அரைக்க

பெரிய வெங்காயம் - 1

தக்காளி - 2

எண்ணெய் - 1 தேக்கரண்டி

செய்முறை: முதலில் பேபி கார்னை  சிறு சிறு துண்டுகளாக  நறுக்கி கொள்ளவும்.  கடாயில்  எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், வதக்கி அரைப்பதற்கு கொடுத்துள்ள வெங்காயம், தக்காளி  வதக்கி இறக்கி ஆற வைத்து, பின் மிக்ஸியில் அரைத்துக் கொள்ள வேண்டும். பின்னர், கடாயில் எண்ணெய் மற்றும் வெண்ணெய் சேர்த்து சூடானதும், சீரகத்தைத் தாளித்து, பின் வெங்காயம் மற்றும் இஞ்சி, பூண்டு பேஸ்ட் சேர்த்து பொன்னிறமாக வதக்கி, அரைத்து வைத்துள்ள  தக்காளி கலவையைச் சேர்க்க வேண்டும். பின்னர், மிளகாய்த் தூள், மல்லித்தூள் மற்றும் கரம் மசாலா சேர்த்து நன்கு கிளறி, தேவையான அளவு உப்பு சேர்த்து 2  நிமிடம் கிளறி,  அதனுடன்  நறுக்கி  வைத்துள்ள பேபி கார்னை   சேர்த்து  நன்கு  கிளறவும். மசாலா பச்சை வாசனை போனவுடன்  2 டம்ளர் தண்ணீர் சேர்த்து நன்கு கொதிக்க வைத்து  தொக்கு பதம் வந்தவுடன் மல்லி இலை போட்டு இறக்கவும். இது  சப்பாத்திக்கு  தொட்டுக் கொள்ள சூப்பராக இருக்கும்.

***

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.