டி20 உலக கோப்பையில் இன்று... இந்திய அணியை 76 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி தென்னாப்பிரிக்கா அபாரம்!தயாரிப்பாளர் சங்கத் தேர்தலில் தலைவர் பதவிக்கு போட்டியிட்ட ஜி கே எம் தமிழ்குமரன் வெற்றிஆப்கானிஸ்தானில் பாகிஸ்தான் தாக்குதல்: இந்தியா கண்டனம்!சென்னை: முதல்வர் மு.க.ஸ்டாலினுடன் காங்கிரஸ் பொதுச் செயலாளர் கே.சி.வேணுகோபால் சந்திப்புபாகிஸ்தானிடமிருந்து போர் விமானங்கள் கொள்முதல்: சோமாலியா பேச்சுவார்த்தை‘ஆபரேசன் த்ரஷி-1’: ஜம்மு - காஷ்மீரில் மேலும் ஒரு பயங்கரவாதியின் உடல் கண்டெடுப்பு! இஸ்ரேல் நாடாளுமன்றத்தில் பிரதமர் மோடி புதன்கிழமை உரையாற்றுகிறார்ஏஐ மாநாட்டில் காங்கிரஸ் சட்டையின்றிப் போராட்டம்: “வெளிநாட்டு விருந்தினர்கள் முன் இந்தியாவுக்குத் தலைகுனிவு!” - பிரதமர் மோடி
/

பப்பாளி கேசரி

செய்முறை: பப்பாளித் துண்டுகளை மிக்ஸியில் போட்டு பால் சேர்த்து அரைத்துக் கொள்ளவும். பிறகு  ரவையை

News image
Updated On :6 ஆகஸ்ட் 2025, 12:12 pm

தவநிதி

தேவையான பொருள்கள் :

பப்பாளித் துண்டுகள் - ஒரு கிண்ணம்

ரவை - ஒரு கிண்ணம்

சர்க்கரை - ஒரு கிண்ணம்

பால் - கால் கிண்ணம்

நெய், முந்திரி - தேவையான அளவு

ஏலக்காய் - 2

செய்முறை: பப்பாளித் துண்டுகளை மிக்ஸியில் போட்டு பால் சேர்த்து அரைத்துக் கொள்ளவும். பிறகு  ரவையை வறுத்து வைத்துக் கொள்ளவும். கடாயில் நெய் ஊற்றி முந்திரி சேர்த்து வறுக்கவும். அதன்பிறகு ஒரு கிண்ணம் ரவைக்கு 2 கிண்ணம் தண்ணீர் விட்டு கலர் பொடி,ஏலக்காய்ப் பொடி, சர்க்கரை மற்றும் அரைத்த பப்பாளி விழுதை சேர்த்து கொதிக்க விடவும். தண்ணீர் கொதித்ததும் ரவையைக் கொட்டி கட்டி தட்டாமல் கிளறி விடவும். ரவை ஒன்று சேர்ந்து வெந்து கெட்டியாகி வரும்போது இறக்கவும். சுவையான பப்பாளி கேசரி தயார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.