எத்தனால் கலப்பு பெட்ரோல்: பாதிப்படைந்த காரை காட்ட முடியுமா?- அமைச்சா் நிதின் கட்கரி சவால் ஒரே பெயரில் வெவ்வேறு மருந்துகள்: தீா்வு காண புதிய நடவடிக்கைஅரசு செயற்கை கருத்தரிப்பு மையத்தில் பிறந்த இரட்டைக் குழந்தைகள்!நிகா்நிலை பல்கலை. அந்தஸ்தால் குறையும் எம்பிபிஎஸ் இடங்கள்தமிழக சிறைகளில் அதிகரிக்கும் கைதிகள் எண்ணிக்கை: போதிய காவலா்கள் இல்லாத அவலம் திறந்தவெளி சந்தை மூலம் பங்குகளைத் திரும்பப் பெறும் முறைக்கு மீண்டும் அனுமதி மதுரை எய்ம்ஸ் மருத்துவக் கல்லூரி அடுத்த மாதம் திறப்பு?
/

ஓலமிட்டு அழுகின்றோம்: எம். ஜெயராமசர்மா

News image
Updated On :7 டிசம்பர் 2016, 4:38 pm IST
       ஜெயமென்னும் பெயர்கொண்டு        ஜெயித்துவந்த ஜெயாவம்மா       ஜெயாமுதல்வர் பதவியுடன்       ஜீவனையே கொடுத்துவிட்டார்       ஜெகமதனில் ஜெயிப்பதற்கு       ஜெயலலிதா ஆகிநின்றார்       ஜெயித்துவிட்டார் உள்ளமெலாம்       ஜெயாவம்மா வாழுகிறார் !        துணிவுகொண்ட பெண்ணானார்        துயர்பலவும் தான்கண்டார்        தனிமையிலே தவித்தாலும்        தமிழ்நாட்டை நினைத்துநின்றார்         அமுதான தமிழோடு        ஆங்கிலமும் பேசிநின்றார்        அதிமுகாவினது ஆணிவேராய்        அவர் இருந்தார் !        அஞ்சாமல் ஆட்சிசெய்த        அம்மாவைக் காண்பதெப்போ        அவருடைய துணிவான        அழகுதமிழ் கேட்பதெப்போ         புன்சிரிப்பு பூத்துநிற்கும்        பூமுகத்தைக காண்பதெப்போ         புகழ்பூத்த பெண்மணியே        உனைக்காணா அழுகின்றோம் !        ஆளுமைமிக்க அரசியல் தலைவியே        ஆரையும்துணிவுடன் அணுகியே நின்றனை        போரிடும்வல்லமை உறுதியாய் கொண்டனை         காலனைவென்றிடும்  வல்லமை இழந்ததேன் !           உன்முகத்தைக் காணாமல் உள்ளமெலாம் அழுகுதம்மா           உன்னுழைப்பை உரமாக்கி உயரமெலாம் உயர்ந்தாயே           என்னினிய தமிழ்மக்கள் எனவெங்கும் குரல்கொடுத்தாய்           உன்னினிய குரல்கேளா ஓலமிட்டு அழுகின்றோம் ! 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.