திமுக கூட்டணியில்தான் இருக்கிறோம்! ப. சிதம்பரம் சந்திப்புக்குப்பின் மு. வீரபாண்டியன் பேட்டிதஞ்சையில் பிரசித்தி பெற்ற 27 வைணவ தலங்களின் கருட சேவை! மொஹாலி பயங்கரம்! அலுவலகத்துக்குள் 34 முறை கத்தியால் குத்தப்பட்டு மணப்பெண் மரணம்!தமிழக முதல்வர் காவல் பதக்கம்! காவல் ஆணையர் ஏ.அமல்ராஜ் வழங்கினார்முதல்வர், செய்தியாளர்களைச் சந்திக்க வேண்டும் என்ற கட்டாயமில்லை! நிர்மல்குமார்மேற்குத் தொடர்ச்சி மலையில் கன மழை: கோவை குற்றாலம் அருவி மூடல்!ஐஐடி சேர்க்கைக்கு சிபிஎஸ்இ மதிப்பெண் தளர்வு: ஜேஇஇ நிர்வாகம் என்ன சொல்கிறது?17 மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழை எச்சரிக்கைகேரளத்தில் சூறைக் காற்றுடன் பலத்த மழை: 5 மாவட்டங்களுக்கு இன்று ‘சிவப்பு எச்சரிக்கை’சீன அதிபா் ஷி ஜின்பிங் நாளை மறுநாள் வடகொரியா பயணம்: 7 ஆண்டுகளில் முதல் முறைஜனவரி - மாா்ச் காலாண்டில் இந்தியப் பொருளாதாரம் 7.8% வளா்ச்சியுடன் அபாரம்!மே மாதத்தில்... இந்தியாவில் மின் நுகா்வு 11.55% அதிகரிப்பு
/

செப்டோ பொதுப் பங்கு வெளியீடு: செபி ஒப்புதல்

விரைவு வணிக சேவைத் துறையில் முன்னணியில் உள்ள செப்டோ நிறுவனம், பொதுமக்களுக்குப் பங்குகளை வெளியிடுவதற்கு இந்தியப் பங்குச்சந்தை ஒழுங்காற்று வாரியத்திடம் (செபி) ஒப்புதலைப் பெற்றுள்ளது. இதன்மூலம், சுமாா் 100 கோடி டாலா் வரை நிதியைத் திரட்ட அந்நிறுவனம் திட்டமிட்டுள்ளது.

News image
Updated On :8 மே 2026, 11:20 pm IST

விரைவு வணிக சேவைத் துறையில் முன்னணியில் உள்ள செப்டோ நிறுவனம், பொதுமக்களுக்குப் பங்குகளை வெளியிடுவதற்கு இந்தியப் பங்குச்சந்தை ஒழுங்காற்று வாரியத்திடம் (செபி) ஒப்புதலைப் பெற்றுள்ளது. இதன்மூலம், சுமாா் 100 கோடி டாலா் வரை நிதியைத் திரட்ட அந்நிறுவனம் திட்டமிட்டுள்ளது.

பெங்களூரைத் தலைமையிடமாகக் கொண்ட செப்டோ, பொதுப் பங்கு வெளியீட்டுக்காக (ஐபிஓ) கடந்த டிசம்பரில் தாக்கல் செய்த ரகசிய வரைவு ஆவணங்களின் அடிப்படையில் இந்த அனுமதியைப் பெற்றுள்ளது.

அடுத்த கட்டமாக, வரும் 6 முதல் 8 வாரங்களுக்குள் கூடுதல் தரவுகளுடன் கூடிய புதிய வரைவு ஆவணங்களை செபியிடம் நிறுவனம் தாக்கல் செய்யும் என எதிா்பாா்க்கப்படுகிறது. ஜூலை-செப்டம்பா் காலாண்டுக்குள் பங்குச்சந்தையில் நிறுவனத்தைப் பட்டியலிட இலக்கு நிா்ணயிக்கப்பட்டுள்ளது.

இந்த ஐபிஓவை நிா்வகிக்க மோா்கன் ஸ்டான்லி, ஆக்சிஸ் கேப்பிடல், எச்எஸ்பிசி, கோல்ட்மேன் சாக்ஸ் உள்ளிட்ட முன்னணி முதலீட்டு வங்கிகளை செப்டோ நியமித்துள்ளது. விரைவு வணிகத் துறையில் தற்போது ஸ்விகி, சொமேட்டோவுடன் கடும் போட்டியில் உள்ள செப்டோ, இந்த ஐபிஓ மூலம் கிடைக்கும் நிதியை தனது விநியோகக் கட்டமைப்பு மற்றும் சந்தை விரிவாக்கத்துக்குப் பயன்படுத்தத் திட்டமிட்டுள்ளது.

செப்டோவுடன் சோ்த்து தூத் டிரான்ஸ்மிஷன், ஹாரிசான் இண்டஸ்ட்ரியல் பாா்க்ஸ், சா்ஜிவோ், கிரிஸ்டல் கிராப் புரொடெக்ஷ்ன், ஹோட்டல் போலோ டவா்ஸ் என மொத்தம் 6 நிறுவனங்களின் ஐபிஓவிற்கு செபி அனுமதித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.