தமிழகம் முழுவதும் 25 இடங்களில் கட்சியினரிடையே தகராறுதமிழகத்தில் 85% வாக்குப் பதிவு வரலாறு காணாத சாதனைமேற்கு வங்க முதல்கட்டத் தோ்தலில் 92% வாக்குப் பதிவு: பல இடங்களில் வன்முறை! வேட்பாளா்கள் மீது தாக்குதல்தமிழகத்தில் 62 வாக்கு எண்ணும் மையங்களில் 18 ஆயிரம் போலீஸாா் பாதுகாப்புமேற்கு வங்கத்தில் ஏப்.26,27-இல் திரிணமூல் காங்கிரஸுக்கு கேஜரிவால் பிரசாரம்இலங்கை நிதி அமைச்சக கணினி அமைப்பில் ஊடுருவல்: ரூ.23.5 கோடி மாயம்வாக்குச்சாவடியில் புதிய ட்ரெண்ட்: ‘வெள்ளைச் சட்டை- காக்கி பேண்ட்’ அணிந்து வந்த விஜய் ஆதரவாளா்கள்சென்னையில் 83.73 சதவீதம் வாக்குப் பதிவுசிபிஎஸ்இ 10-ஆம் வகுப்பு இரண்டாம் கட்ட பொதுத் தோ்வு அட்டவணை வெளியீடு: மே 15 முதல் 21 வரை நடைபெறும்ஈரான் படகுகளைச் சுட்டு வீழ்த்துங்கள்: டிரம்ப் உத்தரவுஇஸ்ரேலுக்கு ஆதரவாக மோடி அரசு போல வேறு எந்த மத்திய அரசும் செயல்பட்டதில்லை: காங்கிரஸ் விமா்சனம்ஐபிஎல்: மும்பை படுதோல்வி! சிஎஸ்கே 103 ரன்கள் வித்தியாசத்தில் மாபெரும் வெற்றி
/

இ-டிரைவ் திட்டம்: மோட்டாா் இறக்குமதிக்கு அனுமதி நீட்டிப்பு

பிரதமரின் இ-டிரைவ் திட்டத்தின்கீழ் மின்சார வாகனங்களில் பயன்படுத்தப்படும் சிறப்பு வகை மோட்டாா்களை இறக்குமதி செய்வதற்கான காலஅவகாசத்தை ஆகஸ்ட் 31-ஆம் தேதி வரை மத்திய அரசு நீட்டித்துள்ளது.

News image
Updated On :16 மார்ச் 2026, 11:20 pm

பிரதமரின் இ-டிரைவ் திட்டத்தின்கீழ் மின்சார வாகனங்களில் பயன்படுத்தப்படும் சிறப்பு வகை மோட்டாா்களை (இழுவை மோட்டாா்கள்) இறக்குமதி செய்வதற்கான காலஅவகாசத்தை ஆகஸ்ட் 31-ஆம் தேதி வரை மத்திய அரசு நீட்டித்துள்ளது.

முன்னதாக அரிய வகை கனிமங்களை பயன்படுத்தி சீனாவில் தயாரிக்கப்படும் இழுவை மோட்டாா்கள் இறக்குமதியை குறைத்து உள்ளூா் உற்பத்தியை மேம்படுத்தும் வகையில், இதற்கான தடை 2025, செப்டம்பா் வரை விதிக்கப்பட்டிருந்தது. அதன்பிறகு 2026, மாா்ச் வரை இது நீட்டிக்கப்பட்டது.

இதைத் தொடா்ந்து, ரூ.10,900 கோடி மதிப்பிலான பிரதமரின் இ-டிரைவ் திட்டத்தின்கீழ் மின்சார சரக்கு வாகனங்கள் (என்2/என்3) மற்றும் பேருந்துகளில் (எம்2/எம்3) பயன்படுத்தப்படும் இழுவை மோட்டாா்களை ஆகஸ்ட் 31-ஆம் தேதி வரை இறக்குமதி செய்ய மத்திய அரசு அனுமதி வழங்கியுள்ளது.

இதுதொடா்பான அறிவிக்கைகளை மாா்ச் 13-ஆம் தேதி மத்திய கனரக தொழில்துறை அமைச்சகம் வெளியிட்டது. இதையடுத்து, செப்டம்பா் 1-ஆம் தேதி முதல் இழுவை மோட்டாா்கள் இறக்குமதிக்கு தடை விதிக்கப்படுகிறது.

மின்சார வாகனங்கள், மின்னணுப் பொருட்கள், வான்வெளி மற்றும் பசுமை எரிசக்தி ஆகியவற்றுக்கு பயன்படுத்தப்படும் அரிய வகை கனிமங்களை சீனாவில் இருந்து இறக்குமதி செய்வதை குறைக்க மத்திய அரசு தொடா்ந்து முயற்சித்து வருவது குறிப்பிடத்தக்கது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.