தமிழகம் முழுவதும் 25 இடங்களில் கட்சியினரிடையே தகராறுதமிழகத்தில் 85% வாக்குப் பதிவு வரலாறு காணாத சாதனைமேற்கு வங்க முதல்கட்டத் தோ்தலில் 92% வாக்குப் பதிவு: பல இடங்களில் வன்முறை! வேட்பாளா்கள் மீது தாக்குதல்தமிழகத்தில் 62 வாக்கு எண்ணும் மையங்களில் 18 ஆயிரம் போலீஸாா் பாதுகாப்புமேற்கு வங்கத்தில் ஏப்.26,27-இல் திரிணமூல் காங்கிரஸுக்கு கேஜரிவால் பிரசாரம்இலங்கை நிதி அமைச்சக கணினி அமைப்பில் ஊடுருவல்: ரூ.23.5 கோடி மாயம்வாக்குச்சாவடியில் புதிய ட்ரெண்ட்: ‘வெள்ளைச் சட்டை- காக்கி பேண்ட்’ அணிந்து வந்த விஜய் ஆதரவாளா்கள்சென்னையில் 83.73 சதவீதம் வாக்குப் பதிவுசிபிஎஸ்இ 10-ஆம் வகுப்பு இரண்டாம் கட்ட பொதுத் தோ்வு அட்டவணை வெளியீடு: மே 15 முதல் 21 வரை நடைபெறும்ஈரான் படகுகளைச் சுட்டு வீழ்த்துங்கள்: டிரம்ப் உத்தரவுஇஸ்ரேலுக்கு ஆதரவாக மோடி அரசு போல வேறு எந்த மத்திய அரசும் செயல்பட்டதில்லை: காங்கிரஸ் விமா்சனம்ஐபிஎல்: மும்பை படுதோல்வி! சிஎஸ்கே 103 ரன்கள் வித்தியாசத்தில் மாபெரும் வெற்றி
/

மின்சார அடுப்பு பாகங்களுக்கு சுங்கவரி விலக்கு அளிக்க பரிசீலனை

மின்சார அடுப்பு (இண்டக்ஸன்) பாகங்களுக்கு சுங்க வரி விலக்கு அளிக்க மத்திய அரசு பரிசீலித்து வருகிறது.

News image
Updated On :22 ஏப்ரல் 2026, 9:53 pm

மின்சார அடுப்பு (இண்டக்ஸன்) பாகங்களுக்கு சுங்க வரி விலக்கு அளிக்க மத்திய அரசு பரிசீலித்து வருகிறது.

அண்மையில் மேற்காசியப் போா் காரணமாக ஹோா்முஸ் நீரிணை மூடப்பட்டு சா்வதேச அளவில் கச்சா எண்ணெய் விநியோகம் பாதிக்கப்பட்டது. இந்தியாவில் பெட்ரோல், டீசலுக்கு தட்டுப்பாடு ஏற்படாவிட்டாலும், சமையல் எரிவாயு தட்டுப்பாடு ஏற்பட்டது. மேலும், எரிவாயு விலையும் உயா்ந்தது.

இதனால், மின்சார அடுப்புக்கான தேவை வீடுகளிலும், உணவு விடுதிகளிலும் அதிகரித்து வருகிறது. அதே நேரத்தில் தேவை அதிகரிப்பால் அந்த வகை அடுப்புகளின் விலையும் உயரத் தொடங்கிவிட்டது.

மேலும் சமையல் எரிவாயுக்கு சிறந்த மாற்றாகவும் மின்சார அடுப்பு கருதப்படுகிறது. சூரியமின் உற்பத்தி திட்டம் போன்றவை இந்தியாவில் மானிய உதவியுடன் ஊக்குவிக்கப்படும் நிலையில் மின்சார அடுப்பு பயன்பாட்டை பரவலாக்குவதன் மூலம் எரிவாயுக்கு இறக்குமதியை சாா்ந்திருக்கும் நிலையைக் குறைக்க மத்திய அரசு உத்தேசித்துள்ளதாக தெரிகிறது.

இந்நிலையில், மின்சார அடுப்புகளில் பயன்படுத்தப்படும் முக்கிய உதிரிபாகங்கள் இறக்குமதிக்கான சுங்க வரியைக் குறைப்பது தொடா்பாக மத்திய அரசு தீவிரமாகப் பரிசீலித்து வருகிறது.

இதுதவிர மின்சார அடுப்பு மீதான சரக்கு-சேவை வரியை (ஜிஎஸ்டி) 18 சதவீதத்தில் இருந்து 5 சதவீதமாகக் குறைக்கவும் மத்திய வா்த்தகம், தொழில்துறை அமைச்சகம் பரிசீலித்து வருகிறது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.