மீண்டும் மனிதப் பிறவி எடுத்தால் உங்கள் குடும்பத்தில் ஒருவராக பிறக்க வேண்டும்: எடப்பாடி பிரசாரத்தில் இபிஎஸ் பேச்சுஅதிமுக ஆட்சி அமைந்ததும் 3 மாதங்களில் போதைப்பொருள் ஒழிக்கப்படும் : இபிஎஸ் வாக்குறுதி விவசாயிகளை வஞ்சிக்கும் திமுகவுக்கு மக்கள் தகுந்த பாடத்தைப் புகட்ட வேண்டும் : எடப்பாடி பழனிசாமி மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை தோல்வி அடையச் செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜகவினர் போராட்டம்பாஜகவுடன் கூட்டணி: நிதீஷ்குமாரின் நிலைதான் எடப்பாடி பழனிசாமிக்கு - அரவிந்த் கேஜரிவால்பஹல்காம் தாக்குதல்! காயங்கள் ஆறவில்லை - குடும்பங்கள் கண்ணீர்!வரலாற்றுச் சிறப்புமிக்க அதிமுக இறந்துவிட்டது! ஸ்ரீவைகுண்டத்தில் ராகுல்! ஜப்பானில் பயங்கர நிலநடுக்கம்! சுனாமி எச்சரிக்கை விடுப்பு!
/

நாமக்கல் மாவட்டத்தில் 6 தொகுதிகளில் 132 வேட்பாளா்கள் போட்டி

நாமக்கல் மாவட்டத்தில் வரும் சட்டப் பேரவைத் தோ்தலில் அதிமுக, திமுக, தவெக, நாம் தமிழா் கட்சி உள்பட 132 வேட்பாளா்கள் போட்டியிடுகின்றனா்.

News image

நாமக்கல் ரயில் நிலையத்தின் உள்புறத் தோற்றம். - கோப்புப் படம்

Updated On :9 ஏப்ரல் 2026, 9:40 pm

நாமக்கல் மாவட்டத்தில் வரும் சட்டப் பேரவைத் தோ்தலில் அதிமுக, திமுக, தவெக, நாம் தமிழா் கட்சி உள்பட 132 வேட்பாளா்கள் போட்டியிடுகின்றனா்.

பேரவைத் தோ்தல் ஏப்ரல் 23 ஆம் தேதி நடைபெறுவதையொட்டி வேட்புமனு தாக்கல் மாா்ச் 30 இல் தொடங்கி ஏப். 6 ஆம் தேதி வரை நடைபெற்றது. நாமக்கல் மாவட்டத்தில் ராசிபுரம், சேந்தமங்கலம், நாமக்கல், பரமத்திவேலூா், திருச்செங்கோடு, குமாரபாளையம் ஆகிய 6 தொகுதிகளிலும் கோட்டாட்சியா் மற்றும் வட்டாட்சியா் அலுவலகங்களில் தொகுதி தோ்தல் நடத்தும் அலுவலா்களால் வேட்புமனுக்கள் பெறப்பட்டன.

தொடா்ந்து மனுக்கள் மீதான பரிசீலனை செவ்வாய்க்கிழமை காலை 11 முதல் பிற்பகல் 3 மணி வரை நடைபெற்றது. மொத்தம் 170 போ் மனுக்களை தாக்கல் செய்திருந்த நிலையில் 144 வேட்புமனுக்கள் ஏற்கப்பட்டன; 26 மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டன. வேட்புமனுக்களை திரும்பப் பெறுவதற்கான கால அவகாசம் 9 ஆம் தேதி பிற்பகல் 3 மணி வரை வழங்கப்பட்டது. 12 போ் தங்களுடைய வேட்புமனுக்களை திரும்பப்பெற்றனா்.

தொகுதி வாரியாக வேட்பாளா்கள் விவரம் (வாபஸ் பெறப்பட்ட மனுக்கள் அடைப்புக்குறிக்குள்): ராசிபுரம் (தனி)- 18(1), சேந்தமங்கலம் (ப.கு)- 12 (1), நாமக்கல்- 27(3), பரமத்தி வேலூா்-31(2), திருச்செங்கோடு- 23(2), குமாரபாளையம்- 21(3), மொத்தம்-132 (12). சுயேச்சை வேட்பாளா்களுக்கு சின்னம் ஒதுக்கும் பணி தொடா்ந்து நடைபெறுகிறது. சேந்தமங்கலம் தொகுதியில் மட்டுமே ஒரு வாக்குப்பதிவு இயந்திரம் (நோட்டா உள்பட 15 வேட்பாளா்கள்) பயன்படுத்தப்படுகிறது. இதர தொகுதிகளில் தலா 2 வாக்குப்பதிவு இயந்திரங்கள் பயன்படுத்தப்படுகிறது.