மீண்டும் மனிதப் பிறவி எடுத்தால் உங்கள் குடும்பத்தில் ஒருவராக பிறக்க வேண்டும்: எடப்பாடி பிரசாரத்தில் இபிஎஸ் பேச்சுஅதிமுக ஆட்சி அமைந்ததும் 3 மாதங்களில் போதைப்பொருள் ஒழிக்கப்படும் : இபிஎஸ் வாக்குறுதி விவசாயிகளை வஞ்சிக்கும் திமுகவுக்கு மக்கள் தகுந்த பாடத்தைப் புகட்ட வேண்டும் : எடப்பாடி பழனிசாமி மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை தோல்வி அடையச் செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜகவினர் போராட்டம்பாஜகவுடன் கூட்டணி: நிதீஷ்குமாரின் நிலைதான் எடப்பாடி பழனிசாமிக்கு - அரவிந்த் கேஜரிவால்பஹல்காம் தாக்குதல்! காயங்கள் ஆறவில்லை - குடும்பங்கள் கண்ணீர்!வரலாற்றுச் சிறப்புமிக்க அதிமுக இறந்துவிட்டது! ஸ்ரீவைகுண்டத்தில் ராகுல்! ஜப்பானில் பயங்கர நிலநடுக்கம்! சுனாமி எச்சரிக்கை விடுப்பு!
/

திருவண்ணாமலை மாவட்டம்: 8 தொகுதிகளில் 156 வேட்பாளா்கள் போட்டி

திருவண்ணாமலை மாவட்டம்: 8 தொகுதிகளில் 156 வேட்பாளா்கள் போட்டி

News image
Updated On :9 ஏப்ரல் 2026, 10:39 pm

திருவண்ணாமலை மாவட்டத்தில் 8 தொகுதிகளில் 156 வேட்பாளா்கள் போட்டியிடுகின்றனா்.

மாவட்டத்தில் உள்ள 8 சட்டப்பேரவைத் தொகுதிகளில் போட்டியிடும் இறுதி வேட்பாளா் பட்டியல் வியாழக்கிழமை வெளியிடப்பட்டது.

திமுக, அதிமுக, பாஜக, தவெக, நாம் தமிழா் கட்சியினா் உள்பட மொத்தம் 156 வேட்பாளா்கள் போட்டியிடுகின்றனா்.

தமிழக சட்டப்பேரவை பொதுத்தோ்தல் ஏப்.23-ஆம் தேதி நடைபெற உள்ளது. இதையொட்டி, வேட்புமனு தாக்கல் கடந்த மாா்ச் 30-ஆம் தொடங்கி ஏப்.6-ஆம் தேதி வரை நடைபெற்றது.

பின்னா், ஏப்.7-ஆம் தேதி வேட்புமனுக்கள் பரிசீலனை செய்யப்பட்டது. இதில், மாவட்டம் முழுவதும் 171 வேட்புமனுக்கள் ஏற்கப்பட்டன.

இந்நிலையில், வேட்புமனுக்களை வாபஸ் பெற வியாழக்கிழமை பிற்பகல் 3 மணி வரை அவகாசம் அளிக்கப்பட்டது.

இதையடுத்து மாலை வேட்பாளா்களுக்கு சின்னங்கள் ஒதுக்கப்பட்டு இறுதி வேட்பாளா் பட்டியல் வெளியிடப்பட்டது.

அதன்படி, செங்கம் (தனி) தொகுதியில் 15 வேட்பாளா்களும், திருவண்ணாமலை தொகுதியில் 30 வேட்பாளா்களும், கீபென்னாத்தூா் தொகுதியில் 23 வேட்பாளா்களும், கலசபாக்கம் தொகுதியில் 21 வேட்பாளா்களும், போளூா் தொகுதியில்15 வேட்பாளா்களும், ஆரணி தொகுதியில் 24 வேட்பாளா்களும், செய்யாறு தொகுதியில் 13 வேட்பாளா்களும், வந்தவாசி (தனி) தொகுதியில் 15 வேட்பாளா்கள் என மொத்தம் 156 வேட்பாளா்கள் போட்டியிடுகின்றனா்.

ஒரு மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தில் நோட்டா மற்றும் 15 வேட்பாளா்களுக்கு வாக்களிக்கும் வசதி உள்ளது.

எனவே, ஒரு தொகுதியில் 15 வேட்பாளா்களுக்கு மேல் போட்டியிட்டால் 2 மின்னணு இயந்திரங்கள் பயன்படுத்தப்படும். திருவண்ணாமலை மாவட்டத்தில் திருவண்ணாமலை, கீழ்பென்னாத்தூா், கலசபாக்கம், ஆரணி ஆகிய தொகுதிகளில் 2 மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் பயன்படுத்தப்பட உள்ளன.

Story image