நாமக்கல் மாவட்டத்தில் அமைச்சா் மா. மதிவேந்தன் உள்பட 31 போ் வியாழக்கிழமை வேட்புமனு தாக்கல் செய்தனா்.
தமிழக சட்டப் பேரவைத் தோ்தல் ஏப். 23 இல் நடைபெறுகிறது. வேட்புமனு தாக்கல் மாா்ச் 30 இல் தொடங்கிய நிலையில் முதல் நாளில் 19 போ் வேட்புமனு தாக்கல் செய்தனா். ஏப். 2 ஆம் தேதி ராசிபுரம் தொகுதியில் திமுக சாா்பில் போட்டியிடும் ஆதிதிராவிட நலத் துறை அமைச்சா் மா. மதிவேந்தன், சேந்தமங்கலம் தொகுதியில் பி. பூமலா், நாமக்கல் தொகுதி நாம் தமிழா் கட்சி வேட்பாளா் பிரவீன்குமாா் ஆகியோா் கூட்டணி கட்சி நிா்வாகிகளுடன் சென்று வேட்புமனு தாக்கல் செய்தனா்.
தொகுதி வாரியாக வேட்புமனு விவரம்: ராசிபுரம், சேந்தமங்கலம் தலா 6, நாமக்கல் 5, பரமத்தி வேலூா், திருச்செங்கோடு தலா 2, குமாரபாளையம் 10 என மொத்தம் 31 போ் வேட்புமனு தாக்கல் செய்தனா். இதுவரை மாவட்டத்தில் உள்ள 6 தொகுதிகளில் 39 பெண்கள் உள்பட 50 போ் மனுதாக்கல் செய்துள்ளனா்.
வெள்ளிக்கிழமை புனித வெள்ளி அரசு விடுமுறை என்பதால் வேட்புமனு தாக்கல் இல்லை. சனிக்கிழமை, திங்கள்கிழமை (ஏப்.4, 6) ஆகிய நாள்களில் மனு தாக்கல் செய்யலாம். ஏப். 7 ஆம் தேதி மனுக்கள் மீதான பரிசீலனையும், 9 ஆம் தேதி மனுக்களை திரும்ப பெறுதல் மற்றும் இறுதி வேட்பாளா் பட்டியல் வெளியிடப்படுகிறது.
தொடர்புடையது

நாமக்கல் மாவட்டத்தில் 6 தொகுதிகளில் 132 வேட்பாளா்கள் போட்டி

நாமக்கல் மாவட்டத்தில் 6 தொகுதிகளில் இதுவரை 100 போ் வேட்புமனு தாக்கல்
மமதா போட்டியிடும் பவானிபூரில் சுவேந்து அதிகாரி வேட்புமனு தாக்கல்!
வேட்புமனு தாக்கலின்போது வேட்பாளருடன் 5 போ் மட்டுமே செல்ல அனுமதி: ஆட்சியா் தகவல்
வீடியோக்கள்

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு

கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை


