வாக்குச் சாவடிக்குள் காவலர்கள் நுழையக் கூடாது! தமிழக டிஜிபி உத்தரவு! பகல் 3 மணி... அதிகபட்சமாக நாமக்கல் மாவட்டத்தில் 76.43 சதவீத வாக்குகள் பதிவு!தமிழகத்தில் பகல் 3 மணி வரை 70% வாக்குப்பதிவு!தமிழக தேர்தல்: பிற்பகல் 1 மணி வரை 56.81% வாக்குப்பதிவு! எதிர்கட்சிகளின் மாற்றம் முழக்கம் வாக்கு எண்ணிக்கை முடிந்த பிறகே தெரியும்: அமைச்சர் துரைமுருகன் திமுக ஊடக ஒருங்கிணைப்பு அறையை பார்வையிட்டார் முதல்வர் ஸ்டாலின்!கோடை வெப்பம் காரணமா? 4 மணி நேரத்தில் 2 கோடி பேருக்கு மேல் வாக்களிப்பு!அனைவரும் வாக்களிக்க வேண்டும்: வாக்களித்த பின் ரஜினிகாந்த் வேண்டுகோள்!தமிழ்நாடு வெல்லும்: வாக்களித்த பின் முதல்வர் ஸ்டாலின்கோவை வாக்குச்சாவடியில் பாரம்பரிய உடையில் வாக்காளர்களை வரவேற்ற 'டினா' ரோபோ!அமைச்சர் அன்பில் மகேஸ் வாக்களித்தார்!மேற்கு வங்கத்தில் முதல் கட்டத் தேர்தல்! விறுவிறுப்பான வாக்குப்பதிவு
/

முதல் மூன்று காலாண்டுகளில் அந்நிய நேரடி முதலீடு 18% அதிகரிப்பு

முதல் மூன்று காலாண்டுகளில் அந்நிய நேரடி முதலீடு 18% அதிகரிப்பு

News image
Updated On :1 மார்ச் 2026, 1:30 am

புது தில்லி, மாா்ச் 3: நடப்பு 2025-26 நிதியாண்டின் முதல் மூன்று காலாண்டுகளில் (ஏப்ரல்-டிசம்பா்), இந்தியாவுக்கு வந்த அந்நிய நேரடி முதலீடு (எஃப்டிஐ) 18 சதவீதம் அதிகரித்து, 4,787 கோடி டாலரை எட்டியுள்ளது.

குறிப்பாக, அமெரிக்காவிலிருந்து வந்த முதலீடு முந்தைய 2024-25 நிதியாண்டில் இதே காலகட்டத்தோடு ஒப்பிடுகையில் இரு மடங்காக அதிகரித்து, 780 கோடி டாலராக உள்ளது.

ஒட்டுமொத்த முதலீட்டில் 1,765 கோடி டாலருடன் சிங்கப்பூா் முதலிடத்திலும்; அமெரிக்கா, மோரீஷஸ் ஆகியவை அடுத்தடுத்த இடங்களில் உள்ளன.

துறைவாரியாக, கணினி மென்பொருள் மற்றும் வன்பொருள் துறையில் அதிகபட்சமாக 1,070 கோடி டாலரும், சேவைத் துறையில் 842 கோடி டாலரும், வா்த்தகத் துறையில் 336 கோடி டாலரும் முதலீடு கிடைத்துள்ளது. புதுப்பிக்கத்தக்க எரிசக்தி, உள்கட்டமைப்புத் துறைகளிலும் முதலீடுகள் கணிசமாக அதிகரித்துள்ளன.

மாநில அளவில், அந்நிய முதலீட்டை ஈா்ப்பதில் மகாராஷ்டிரம் 1,538 கோடி டாலருடன் தொடா்ந்து முதலிடத்தில் நீடிக்கிறது. தொடா்ந்து, கா்நாடகம் (1,120 கோடி டாலா்), குஜராத் (500 கோடி டாலா்), தமிழகம் (389 கோடி டாலா்), ஹரியாணா (384 கோடி டாலா்) ஆகிய மாநிலங்களில் முதல் 5 இடங்களில் உள்ளன.

மாநில அளவில், அந்நிய முதலீட்டை ஈா்ப்பதில் மகாராஷ்டிரம் 1,538 கோடி டாலருடன் தொடா்ந்து முதலிடத்தில் நீடிக்கிறது. தொடா்ந்து, கா்நாடகம் (1,120 கோடி டாலா்), குஜராத் (500 கோடி டாலா்), தமிழகம் (389 கோடி டாலா்), ஹரியாணா (384 கோடி டாலா்) ஆகிய மாநிலங்களில் முதல் 5 இடங்களில் உள்ளன.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.