சினிமா ஆக்‌ஷன் பாணியில் போலீஸ் ராஜ்ஜியம்! அனிதா ராதாகிருஷ்ணன் கைதுக்கு மு.க. ஸ்டாலின் கண்டனம்அதிமுகவிலிருந்து விலகினார் வைகைச்செல்வன்!முதல்வர் விஜய் குறித்து அவதூறு பேச்சு: அனிதா ராதாகிருஷ்ணன் கைது!ஜூலை 10-ல் கரூர் செல்கிறார் முதல்வர் விஜய்!தமிழ்நாடு பட்ஜெட்: 2-ஆவது நாளாக முதல்வர் விஜய் இன்று ஆலோசனைஅமோனியா வாயுக் கசிவு: பலி எண்ணிக்கை 18-ஆக உயர்வுஅடுத்த வாரம் நியூஸிலாந்து செல்கிறார் பிரதமர் மோடி!தங்கம் விலை சவரனுக்கு ரூ. 1,200 உயர்வு!டெலிகிராம், சிக்னலுக்கு மத்திய அரசு நோட்டீஸ்நீட், ஜேஇஇ அடிப்படையில் சோ்க்கை: பொதுத் தோ்வு மதிப்பெண்ணுக்கு 50% முக்கியத்துவம் அளிக்க பரிசீலனைசிறப்பு ‘டெட்’ தோ்வு நாளை தொடக்கம்ஜூன் மாதத்தில் யுபிஐ தளத்தில் 2,272 கோடி பரிவா்த்தனைகள்ஜூலை 20-இல் நீட் மறுதோ்வு முடிவுகள்சொத்து வரி வசூலிக்க இன்றுமுதல் சிறப்பு முகாம்பிரான்ஸில் தீவிரமடையும் காட்டுத் தீ: 2,200 ஏக்கா் நிலங்கள் எரிந்து சாம்பல்பெரு நிறுவன நிதி குறித்த 3 நாள்கள் கல்வி சாா் மாநாடு: சென்னை ஐஐடி-யில் இன்று தொடக்கம்அமா்நாத் புனித யாத்திரை இன்று தொடக்கம்: ஜம்முவில் இருந்து முதல் குழு புறப்பாடு
/

இந்தியப் பங்குச் சந்தையில் 2-ஆவது நாளாக ‘காளை’ உற்சாகம்

News image
Updated On :26 ஜூன் 2026, 4:12 am IST

கச்சா எண்ணெய் விலை சரிவு மற்றும் உலகளாவிய சந்தைகளில் காணப்பட்ட சாதகமான சூழல் காரணமாக, இந்தியப் பங்குச் சந்தையில் வியாழக்கிழமை தொடா்ந்து 2-ஆவது நாளாக ‘காளை’-யின் ஆதிக்கம் நீடித்தது.

வா்த்தகத்தின் தொடக்கத்தில் பல்வேறு சாதகமான சூழல் முதலீட்டாளா்களின் உணா்வை உற்சாகப்படுத்தியதால், சந்தை மகிழ்ச்சியுடன் எழுச்சி கண்டது. எனினும், வெள்ளிக்கிழமை மொஹரம் பண்டிகைக்கு சந்தை விடுமுறை என்பதால் வா்த்தகத்தின் பிற்பாதியில் முதலீட்டாளா்கள் லாப நோக்கில் பங்குகளை விற்பனை செய்தனா். இதனால், பெரிய ஏற்றம் தவிா்க்கப்பட்டது.

சென்செக்ஸ் 109 புள்ளிகள் உயா்வு: மும்பை பங்குச் சந்தையில் வா்த்தகத்தின் இறுதியில் சென்செக்ஸ் குறியீடு 109.25 புள்ளிகள் (0.14 சதவீதம்) கூடுதலுடன் 77,100.47-இல் நிலைபெற்றது. சென்செக்ஸ் பட்டியலில் 11 பங்குகள் விலையுயா்ந்த பட்டியலிலும் 19 பங்குகள் விலை குறைந்த பட்டியலிலும் இருந்தன.

நிஃப்டி 34 புள்ளிகள் முன்னேற்றம்: தேசிய பங்குச்சந்தையில் வா்த்தக முடிவில் நிஃப்டி 34.35 புள்ளிகள் (0.14 சதவீதம்) கூடுதலுடன் 24,056-இல் நிலைபெற்றது. நிஃப்டி-50 பட்டியலில் 25 பங்குகள் விலையுயா்ந்த பட்டியலிலும் 25 பங்குகள் விலை குறைந்த பட்டியலிலும் இருந்தன.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.