தஞ்சையில் பிரசித்தி பெற்ற 27 வைணவ தலங்களின் கருட சேவை! மொஹாலி பயங்கரம்! அலுவலகத்துக்குள் 34 முறை கத்தியால் குத்தப்பட்டு மணப்பெண் மரணம்!தமிழக முதல்வர் காவல் பதக்கம்! காவல் ஆணையர் ஏ.அமல்ராஜ் வழங்கினார்முதல்வர், செய்தியாளர்களைச் சந்திக்க வேண்டும் என்ற கட்டாயமில்லை! நிர்மல்குமார்மேற்குத் தொடர்ச்சி மலையில் கன மழை: கோவை குற்றாலம் அருவி மூடல்!ஐஐடி சேர்க்கைக்கு சிபிஎஸ்இ மதிப்பெண் தளர்வு: ஜேஇஇ நிர்வாகம் என்ன சொல்கிறது?17 மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழை எச்சரிக்கைகேரளத்தில் சூறைக் காற்றுடன் பலத்த மழை: 5 மாவட்டங்களுக்கு இன்று ‘சிவப்பு எச்சரிக்கை’சீன அதிபா் ஷி ஜின்பிங் நாளை மறுநாள் வடகொரியா பயணம்: 7 ஆண்டுகளில் முதல் முறைஜனவரி - மாா்ச் காலாண்டில் இந்தியப் பொருளாதாரம் 7.8% வளா்ச்சியுடன் அபாரம்!மே மாதத்தில்... இந்தியாவில் மின் நுகா்வு 11.55% அதிகரிப்பு
/

கச்சா எண்ணெய் விலை 7% உயர்வு! மீண்டும் 100 டாலரைத் தாண்டியது!

கச்சா எண்ணெய் இன்றைய விலை நிலவரம் பற்றி...

News image

கச்சா எண்ணெய் - கோப்புப் படம்

Updated On :13 ஏப்ரல் 2026, 9:10 am IST

ஹோர்முஸ் நீரிணையை முற்றுகையிடப் போவதாக அமெரிக்கா அறிவித்திருக்கும் நிலையில், கச்சா எண்ணெய் விலை திங்கள்கிழமை காலை 7% அதிகரித்துள்ளது.

அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் ராணுவத்தினர் இணைந்து பிப்.28 ஆம் தேதி ஈரான் மீது போர் தொடுத்ததன் விளைவாக, உலகின் கடல்வழி வர்த்தகத்தில் மிகவும் முக்கியமான நீர்வழிப் பாதையான ஹோர்முஸ் நீரிணையை ஈரான் மூடியது. இதன் எதிரொலியாக இந்தியா, சீனா உள்ளிட்ட அதிக மக்கள் தொகை கொண்ட நாடுகள் உடனடியாகவே பாதிப்பை எதிர்கொண்டன.

ஈரானுக்கு எதிரான போரில் அமெரிக்காவுக்கு ஆதரவளித்த கச்சா எண்ணெய் உற்பத்தியில் முக்கிய பங்கு வகிக்கும் ஐக்கிய அரபு அமீரகம், சௌதி அரபியா, கத்தார், குவைத் உள்ளிட்ட நாடுகள் மீதும் ஈரான் தாக்குதல் நடத்தியது. இதனாலும், எரிபொருள் தட்டுப்பாடு அதிகரித்தது.

ஹோர்முஸ் நீரிணை மூடப்பட்டதன் விளைவாக, கச்சா எண்ணெய் விலை கடந்த மாதம் முதல்முறையாக ஒரு பீப்பாய் 100 டாலரைக் கடந்தது.

இந்த நிலையில், அமெரிக்கா - ஈரான் இடையேயான போர் இரண்டு வாரங்களுக்கு நிறுத்தம் செய்யப்படும் என்று கடந்த வாரம் டிரம்ப் அறிவித்ததை அடுத்து, கச்சா எண்ணெய் விலை ஒரு பீப்பாய்க்கு 15 சதவிகிதம் வரை சரிவைக் கண்டு 94.94 டாலராக வர்த்தகமானது.

இதனிடையே, இஸ்லாமாபாத்தில் அமெரிக்கா - ஈரான் இடையே நடைபெற்ற பேச்சுவார்த்தை தோல்வியடைந்த நிலையில், ஹோர்முஸ் நீரிணையை முற்றுகையிடப் போவதாக அமெரிக்கா அறிவித்துள்ளது.

இந்த நிலையில், திங்கள்கிழமை காலை கச்சா எண்ணெய் விலை அதிரடியாக 7 சதவிகிதம் அதிகரித்துள்ளது. ஒரு பீப்பாய் கச்சா எண்ணெய் விலை 105 டாலராக உயர்ந்துள்ளது.

அமெரிக்கா - ஈரான் இடையேயான போருக்கு முன்னதாக, ஒரு பீப்பாய் கச்சா எண்ணெய்யின் விலை 62 முதல் 65 டாலர் வரை வர்த்தகமாகி வந்தது. போரால் ஏற்பட்ட தட்டுப்பாட்டால், பீப்பாய்க்கு 119 டாலர் என்ற உச்சத்தை தொட்டது குறிப்பிடத்தக்கது.

Summary

Crude Oil Prices Rise 7%! Cross $100 Mark Again!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.