ஆப்பிள் அதன் அடுத்த தலைமுறை ஐபாட் மற்றும் ஐபாட் புரோ மாடல்களுடன் 2020-ஆம் ஆண்டில் கத்தரிக்கோல் சுவிட்ச் வடிவமைப்புடன் புதுப்பிக்கப்பட்ட ஸ்மார்ட் கீபோர்டை அறிமுகப்படுத்த திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.
ஐபோன் தயாரிப்பாளரான ஆப்பிள் புதிய மாடலில் கத்தரிக்கோல்-சுவிட்ச் கீபோர்ட் வடிவமைப்பை 2019-இன் இறுதியில் 16 அங்குல மேக்புக் ப்ரோவுடன் அறிமுகப்படுத்தினர். பிற மேக்புக்ஸும் 2020-ஆம் ஆண்டில் இந்த கீபோர்ட் வடிவமைப்பைப் பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ஜூலை 2019-இல், பிரபல ஆப்பிள் ஆய்வாளர் மிங்-சி குவோ, ஐபாட் கீபோர்டுகள் 2020-21-ஆம் ஆண்டில் கத்தரிக்கோல் சுவிட்சுகளை விட, ரப்பர் டோம் வடிவமைப்பு சிறப்பாக இருந்திருக்கும் என்று கூறினார்.

2020 முதல் பாதியில் ஆப்பிள், பின்புற 3 டி சென்ஸிங் கொண்ட புதிய ஐபாட் புரோ மாடல்களை வெளியிடும் என்று குவோ சமீபத்தில் குறிப்பிட்டிருந்தார்.
ஐபாட் புரோ மாடல்கள் பேக் கேமரா அமைப்பு மூலம் 3 டி சென்சிங்கைப் பெறும் என்று டிஎஃப் இன்டர்நேஷனல் செக்யூரிட்டீஸ் உடனான ஆய்வுக் குறிப்பில் குவோ கூறினார்.
இந்த அறிக்கையின்படி, ஆப்பிள் டைம்-ஆஃப்-ஃப்ளைட் சிஸ்டம் முறையைப் பயன்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது, இது ஒரு 3D வரைபடத்தை உருவாக்க ஒரு அறையில் உள்ள பொருட்களை ஒளிரச் செய்ய எடுக்கும் நேரத்தை அளவிடும்.
கூடுதலாக, ஆப்பிள் தனது குறைந்த விலை ஐபோன் "எஸ்இ 2" ஐ 2020-ஆம் ஆண்டின் முதல் பாதியில் வெளியிடத் திட்டமிட்டுள்ளது என்றும் குவோ மேலும் கூறினார்.
ஐபோன் எஸ்இ 2 அதன் மதர்போர்டுக்கு 10-அடுக்கு சப்ஸ்ட்ரேட் போன்ற பிசிபி (எஸ்எல்பி) ஐப் பயன்படுத்தும், இது ஐபோன் 11-ல் பயன்படுத்தப்பட்ட அதே தொழில்நுட்பம்.
இந்த ஃபோன் ஐபோன் 8 ஐப் போலவே இருக்கும் என்று குவோ எதிர்பார்க்கிறார், மேலும் இது தற்போதுள்ள ஐபோன் 6 மற்றும் ஐபோன் 6 எஸ் உரிமையாளர்கள் இதை அப்க்ரேட் செய்ய விரும்புவர் என்று நம்புகிறார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

ஆண்டிமடம் அருகே சுமை ஆட்டோ தீப்பிடித்து விபத்து ரூ.10 லட்சம் மதிப்பிலான பொருள்கள் எரிந்து நாசம்

உணவகத்தில் அராஜகம்: சிறுவன் உள்ளிட்ட இருவா் கைது

காரைக்கால் அருகே மீனவா் தற்கொலை

மாடியிலிருந்து தவறி விழுந்த முதியவா் உயிரிழப்பு
வீடியோக்கள்

உன்னை நம்பி பாடல் வெளியானது!
இணையதளச் செய்திப் பிரிவு
3 நாள்களுக்குள் ஈரான் எண்ணெய் உள்கட்டமைப்புகள் வெடிக்கும்! Trump எச்சரிக்கை
இணையதளச் செய்திப் பிரிவு

சூப்பர் ஓவரில் சொதப்பிய பூரன் | IPL 2026 | kkr vs lsg | Nicholas Pooran | Super Over
தினமணி செய்திச் சேவை

வெள்ளிச்சுடரே பாடல்!
தினமணி செய்திச் சேவை


