ஜவுளி உற்பத்திக்கான உலக வரைபடத்தில் கரூருக்கு என்றுமே தனி இடம் உண்டு. இங்கிருந்து அமெரிக்கா, தென் அமெரிக்க நாடுகள், ஜப்பான், ஆஸ்திரேலியா, நியுஸிலாந்து மற்றும் ஐரோப்பிய நாடுகளுக்கு வீட்டு உபயோக ஜவுளிப் பொருள்களான திரைச்சீலை, கால் மிதியடிகள், தரை விரிப்புகள், குஷன்கள், கைக்குட்டைகள் உள்ளிட்டவை ஏற்றுமதியாகின்றன. இவற்றின் மூலம் ஆண்டுக்கு ரூ.3,000 கோடி அன்னியச் செலாவணி அரசுக்குக் கிடைத்து வந்தது. 2011-க்குப் பின்னர் இந்தத் தொழில் நலிவடையத் தொடங்கியது. காரணம், ஜவுளி உற்பத்திக்கு மூல நிறுவனங்களான சிறு சாய மற்றும் சலவை ஆலைகள் மூடப்பட்டன.