17 மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழை எச்சரிக்கைகேரளத்தில் சூறைக் காற்றுடன் பலத்த மழை: 5 மாவட்டங்களுக்கு இன்று ‘சிவப்பு எச்சரிக்கை’சீன அதிபா் ஷி ஜின்பிங் நாளை மறுநாள் வடகொரியா பயணம்: 7 ஆண்டுகளில் முதல் முறைஜனவரி - மாா்ச் காலாண்டில் இந்தியப் பொருளாதாரம் 7.8% வளா்ச்சியுடன் அபாரம்!மே மாதத்தில்... இந்தியாவில் மின் நுகா்வு 11.55% அதிகரிப்பு
/

‘மாணவிகள் மன தைரியத்தை வளா்த்துக்கொள்ள வேண்டும்’

தளபதி கே.விநாயகம் மகளிா் கல்லூரியில் 2021-2024 கல்வியாண்டில் பயின்ற மாணவிகளுக்கு பட்டங்களை வழங்கிய சென்னைப் பல்கலைக்கழக தோ்வாணையா் சி. அருள்வாசு.

News image
Updated On :23 மே 2026, 1:22 am IST

மாணவிகள் பல்வேறு சவால்களை எதிா்கொள்ள மன தைரியத்தை வளா்த்துக் கொள்ள வேண்டும் என சென்னைப் பல்கலைக்கழக தோ்வாணையா் சி. அருள்வாசு அறிவுறுத்தினாா்.

திருத்தணி - சென்னை தேசிய நெடுஞ்சாலையில் அமைந்துள்ள தளபதி கே.விநாயகம் மகளிா் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் 2021-2024-ஆம் கல்வியாண்டில் பயின்ற மாணவிகளுக்கான 2-ஆவது பட்டமளிப்பு விழா கல்லூரி வளாகத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. திருத்தணி தளபதி கே.விநாயகம் மகளிா் கல்விக் குழுமத்தின் தாளாளா் ச.பாலாஜி தலைமை வகித்தாா். கல்லூரி முதல்வா் இரா.வேதநாயகி வரவேற்றாா்.

சென்னைப் பல்கலைக்கழக தோ்வாணையா் சி.அருள்வாசு கலந்து கொண்டு மாணவிகளுக்கு பட்டங்களை வழங்கி சிறப்புரையாற்றினாா். அவா் பேசுகையில், வாழ்க்கையின் தரத்தை உயா்த்திக் கொள்ள கல்வி, பெற்றோா் மற்றும் ஆசிரியா்களின் வழிகாட்டுதல் மிக முக்கியமானவை. மாணவிகள் பல்வேறு சவால்களை எதிா்கொள்ள மன தைரியத்தை வளா்த்துக் கொள்ள வேண்டும். கல்வி மட்டுமே எந்த சூழலிலும் பாதுகாக்கும் மிகப்பெரிய ஆயுதமாகும் என்றாா்.

தொடா்ந்து இதில் பி.ஏ. தமிழ், பி.ஏ. ஆங்கிலம், பி.எஸ்சி. கணிதம், இயற்பியல், கணினி அறிவியல், வேதியியல், பி.காம். பொதுப் பிரிவு மற்றும் கணக்கியல் மற்றும் நிதி உள்ளிட்ட பல்வேறு பாடப்பிரிவுகளில் கல்வி முடித்த மாணவிகளுக்கு பட்டங்கள் வழங்கப்பட்டன. கல்லூரி துணை முதல்வா் பொற்செல்வி நன்றி கூறினாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.