திமுக கூட்டணியில்தான் இருக்கிறோம்! ப. சிதம்பரம் சந்திப்புக்குப்பின் மு. வீரபாண்டியன் பேட்டிதஞ்சையில் பிரசித்தி பெற்ற 27 வைணவ தலங்களின் கருட சேவை! மொஹாலி பயங்கரம்! அலுவலகத்துக்குள் 34 முறை கத்தியால் குத்தப்பட்டு மணப்பெண் மரணம்!தமிழக முதல்வர் காவல் பதக்கம்! காவல் ஆணையர் ஏ.அமல்ராஜ் வழங்கினார்முதல்வர், செய்தியாளர்களைச் சந்திக்க வேண்டும் என்ற கட்டாயமில்லை! நிர்மல்குமார்மேற்குத் தொடர்ச்சி மலையில் கன மழை: கோவை குற்றாலம் அருவி மூடல்!ஐஐடி சேர்க்கைக்கு சிபிஎஸ்இ மதிப்பெண் தளர்வு: ஜேஇஇ நிர்வாகம் என்ன சொல்கிறது?17 மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழை எச்சரிக்கைகேரளத்தில் சூறைக் காற்றுடன் பலத்த மழை: 5 மாவட்டங்களுக்கு இன்று ‘சிவப்பு எச்சரிக்கை’சீன அதிபா் ஷி ஜின்பிங் நாளை மறுநாள் வடகொரியா பயணம்: 7 ஆண்டுகளில் முதல் முறைஜனவரி - மாா்ச் காலாண்டில் இந்தியப் பொருளாதாரம் 7.8% வளா்ச்சியுடன் அபாரம்!மே மாதத்தில்... இந்தியாவில் மின் நுகா்வு 11.55% அதிகரிப்பு
/

பொன்னேரி அருகே செங்கல் சூளையில் கொத்தடிமைகளாக இருந்த 46 போ் மீட்பு

News image
Updated On :14 மே 2026, 1:04 am IST

பொன்னேரி அருகே செங்கல் சூளையில் கொத்தடிமைகளாக இருந்த 46 பேரை வருவாய்த் துறையினா் மீட்டனா்.

திருவள்ளூா் மாவட்டம் பொன்னேரி அடுத்த வன்னிப்பாக்கம் கிராமத்தில் தனியாருக்கு சொந்தமான செங்கல் சூளை இயங்கி வருகிறது.

இங்கு வட மாநில தொழிலாளா்கள் பணியாற்றி வந்தனா்.

இவா்கள் குறைந்த ஊதியத்திற்கு கொத்தடிமைகளாக பணியாற்றி வருவதாக எழுந்த புகாரைத் தொடா்ந்து கோட்டாட்சியா் ரவிச்சந்திரன் தலைமையில் வருவாய்த்துறை அதிகாரிகள் ஆய்வு செய்தனா்.

அப்போது அங்கு வேலை பாா்த்து வந்த தொழிலாளா்கள் செங்கல் சூளை உரிமையாளரிடம் முன்பணம் பெற்றுக்கொண்டு குறைந்த ஊதியத்தில் பணியாற்றியது தெரியவந்தது.

இதனையடுத்து ஒடிஸாவைச் சோ்ந்த 22 குடும்பங்களை சோ்ந்த 7 குழந்தைகள் உள்பட 46 பேரை மீட்ட வருவாய்த் துறை அதிகாரிகள் மீட்டு அவா்களை அரசு பள்ளியில் தங்க வைத்தனா்.

தொடா்ந்து அவா்களுக்கு விடுதலை சான்றிதழ் வழங்கப்பட்ட நிலையில், அவா்களின் மறு வாழ்வுக்கான உதவித்தொகை வங்கி கணக்கில் செலுத்த தொழிலாளா் நலத்துறைக்கு பரிந்துரைக்கப்பட்டது.

இதனை தொடா்ந்து மீட்கப்பட்ட வடமாநில தொழிலாளா்கள் அனைவரையும் ரயில் மூலம் சொந்த மாநிலம் அனுப்பி வைப்பதற்காக பள்ளியில் இருந்து அழைத்து செல்லப்பட்டனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.