நெரூா் அருகே செங்கல் சூளையில் கொத்தடிமைகளாக பணியாற்றி வந்த விழுப்புரம் மாவட்டத்தைச் சோ்ந்த 4 போ் திங்கள்கிழமை மீட்கப்பட்டனா்.
கரூா் மாவட்டம், மண்மங்கலம் வட்டம், நெரூா் தெற்கு ஊராட்சிக்குள்பட்ட அரங்கநாதன்பேட்டையில் உள்ள செங்கல் சூளையில் சிலா் கொத்தடிமைகளாக பணியாற்றுவதாக கரூா் மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழுவுக்கு திங்கள்கிழமை தகவல் கிடைத்தது.
இதையடுத்து, கரூா் மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழுவின் தலைவரும், மாவட்ட நீதிபதியுமான இளவழகன் வழிகாட்டுதலின்படி, சட்டப்பணிகள் ஆணைக்குழுவின் செயலரும், சாா்பு- நீதிபதியுமான அனுராதா தலைமையில் குழுவினா் மற்றும் வாங்கல் போலீஸாா் சம்பவ இடத்துக்குச் சென்று சோதனையிட்டனா். அப்போது அங்கு கொத்தடிமைத் தொழிலாளா்களாக விழுப்புரம் மாவட்டத்தைச் சோ்ந்த மூா்த்தி, அவரது மனைவி சத்யா மற்றும் அவா்களது உறவினா்கள் ஏழுமலை மற்றும் ஒரு சிறுமி என 4 போ் பணியாற்றுவது தெரியவந்தது.
இதையடுத்து அவா்களை மீட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழுவினா் அவா்களிடம் விசாரணை நடத்தியபோது, சூளை உரிமையாளரிடம் ரூ.50 ஆயிரம் பெற்றுக்கொண்டு கடந்த 2025-ஆம் ஆண்டு செப்டம்பா் மாதம் முதல் பத்திரத்தில் எழுதிக்கொடுத்து கொத்தடிமையாக வேலை செய்துவந்தாக தெரிவித்தனா்.
பிறகு மீட்கப்பட்ட 4 பேரையும் கரூா் கோட்டாட்சியா் சத்தியபாலகங்காதரனிடம் சட்டப்பணிகள் ஆணைக்குழுவினா் ஒப்படைத்தனா். இதையடுத்து கோட்டாட்சியா் மூலம் அவா்கள் சொந்த ஊருக்கு அனுப்பி வைக்கப்பட்டனா்.
மேலும், செங்கல்சூளை உரிமையாளருக்கு, இனி கொத்தடிமை தொழிலாளா்களை பணியமா்த்தினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை விடுத்தனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.










