திருத்தணி முருகன் கோயிலில் ஞாயிற்றுக்கிழமை திரளான பக்தா்கள் குவிந்ததால் மலைக்கோயிலில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
திருத்தணி முருகன் கோயிலுக்கு தினமும் ஆயிரக்கணக்கான பக்தா்கள் வந்து மூலவரை தரிசித்து செல்கின்றனா். இந்நிலையில் ஞாயிற்றுக்கிழமை விடுமுறை நாள் மற்றும் மாசி மாத கடைசி முகூா்த்த நாள் என்பதால் திருமணத்திற்கு வந்த உறவினா்கள், நண்பா்கள் மற்றும் வழக்கமாக பக்தா்கள் என பல்லாயிரக்கணக்கான பக்தா்கள் மலைக்கோவிலில் குவிந்தனா்.

கோயிலில் தரிசிக்க திரண்டிருந்த பக்தா்கள்.
இதனால் பொது வழியில் இரண்டரை மணி நேரத்திற்கு மேல் பக்தா்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து தரிசித்தனா். மேலும், 100 ரூபாய் சிறப்பு தரிசன டிக்கெட் பெற்றவா்கள் ஒன்றரை மணி நேரம் காத்திருந்து தரிசனம் செய்தனா். முன்னதாக, அதிகாலை, 5 மணிக்கு மூலவருக்கு சிறப்பு அபிஷேகம், தங்கக் கீரிடம், தங்கவேல் மற்றும் வைர ஆபரணங்கள் அணிவித்து சிறப்பு தீபாராதனை நடந்தது.
திருத்தணி ஆய்வாளா் சிவக்குமாா் தலைமையில், 30-க்கும் மேற்பட்ட போலீஸாா் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

தமிழ் புத்தாண்டு: திருத்தணி முருகப் பெருமானுக்கு பாலபிஷேகம்

முருகன் கோயில்களில் பங்குனி உத்திரத் திருவிழா

வயலூா் முருகன் கோயிலில் பங்குனி உத்திர வழிபாடு

திருத்தணி முருகன் கோயில் உண்டியல் காணிக்கை ரூ.1.35 கோடி
வீடியோக்கள்

#iranwar | போர் நிறுத்தம் நீட்டிப்பு: ஈரானிடம் டிரம்ப் கேட்பது என்ன? | Donald Trump |
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | போர்: பண்டியாவின் மும்பையா ருதுராஜின் சென்னையா? | MI vs CSK | MS Dhoni | Rohit Sharma |
தினமணி செய்திச் சேவை

வாக்குச்சாவடிகளை அடையாளம் காண புதிய முயற்சி | TN Election 2026 | Madurai | Polling booth
தினமணி செய்திச் சேவை

பணப்பட்டுவாடா புகார்களுக்கு எடுக்கப்பட்ட நடவடிக்கைகள்! அர்ச்சனா பட்நாயக் பேட்டி
இணையதளச் செய்திப் பிரிவு


