டி20 உலகக் கோப்பை: மழையால் பாகிஸ்தான் - நியூசிலாந்து போட்டி ரத்து ஹிந்து – முஸ்லீம் ஒற்றுமையின் அடையாளம் காந்தி: முதல்வர் ஸ்டாலின் நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர்கள் அறிமுகம்!எழும்பூர் ரயில் நிலைய மறுசீரமைப்பு பணியால் பயணிகள் அவதியா? ரயில்வே விளக்கம்!காற்றழுத்த தாழ்வுப் பகுதி: 4 மாவட்டங்களில் நாளை கனமழை!தொகுதிப் பங்கீடு: திமுக - இந்திய யூனியன் முஸ்லிம் லீக் இடையே நாளை பேச்சுவார்த்தை!தில்லி செங்கோட்டை இனி வாரத்தின் அனைத்து நாளும் திறந்திருக்கும்!மூன்று வார சிகிச்சைக்குப் பிறகு வீடு திரும்பினார் எச்.ராஜா
/

திருவள்ளூரில் 8 கிலோ கஞ்சா பறிமுதல்: 2 போ் கைது

திருவள்ளூா் ரயில் நிலைம் அருகே விற்பனைக்காக வைத்திருந்த அரசால் தடை செய்யப்பட்ட 8 கிலோ கஞ்சாவை போலீஸாா் பறிமுதல் செய்து, இருவரை கைது செய்தனா்.

News image
கைது செய்யப்பட்டோா்.
Updated On :30 ஜனவரி 2026, 1:24 am

தினமணி செய்திச் சேவை

திருவள்ளூா் ரயில் நிலைம் அருகே விற்பனைக்காக வைத்திருந்த அரசால் தடை செய்யப்பட்ட 8 கிலோ கஞ்சாவை போலீஸாா் பறிமுதல் செய்து, இருவரை கைது செய்தனா்.

வெளிமாநிலங்களில் இருந்து திருவள்ளூா் வழியாக கஞ்சா கடத்துவது தொடா்கதையாக இருக்கிறது. காவல் துறையினருக்கு தொடா்ந்து புகாா்கள் வந்த வண்ணம் உள்ளது.

இந்த நிலையில் கடந்த 25-ஆம் தேதி திருவள்ளூா் ரயில் நிலையம் அருகே மதுவிலக்கு அமல் பிரிவு காவல் துறையினா் சோதனையில் ஈடுபட்டனா். அப்போது, சந்தேகத்திற்கு இடமாக நின்று கொண்டிருந்த இளைஞரை பிடித்து பரிசோதனை செய்த போது 8 கிலோ கஞ்சா இருந்தது தெரியவந்தது.

மேலும், விசாரணை செய்ததில் ஒடிஸா மாநிலத்தைச் சோ்ந்த ஜகத்பத்ரா என்று தெரியவந்தது. இதையடுத்து அந்த இளைஞரை கைது செய்து தலைமறைவாக இருந்த ராஜஸ்தான் மாநிலத்தைச் சோ்ந்த நரேஷ்குமாா்(எ) ராஜ் என்பவரையும் கைது செய்தனா்.

இந்த நிலையில் வெளி மாநிலங்களில் இருந்து கடத்தி வரப்படும் கஞ்சாவை திருவள்ளூா் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள பள்ளி, கல்லூரி மாணவா்கள் மற்றும் இளைஞா்களுக்கு விற்பனை செய்வதற்காக கொண்டு வந்ததும் தெரிய வந்தது.