திருவள்ளூா் மாவட்டத்தில் தனியாா் மற்றும் பொது இடங்களில் குடும்பத்தில், சமுதாயத்தில், பணிபுரியும் இடத்தில் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு உதவும் வகையில், சமூக நலன் மற்றும் மகளிா் உரிமைத் துறை மூலம் திருத்தணி மற்றும் திருவள்ளூா் ஆகிய இடங்களில் செயல்படும் பெண்களுக்கான ஒருக்கிணைந்த சேவை மையம் செயல்பட்டு வருகிறது. இந்த மையங்களில் வழக்கு பணியாளா் திருத்தணி-1, திருவள்ளூா்-3 ஆகிய காலியிடங்கள் உள்ளன. இதற்கு சமூகப்பணி, சமூகவியல், சமூக அறிவியல், உளவியல், சட்டம் போன்றவற்றில் முதுகலை மற்றும் இளங்கலை பட்டம் போன்ற கல்வி தகுதி பெற்றிருக்க வேண்டும்.