டி20 உலக கோப்பையில் இன்று... இந்திய அணியை 76 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி தென்னாப்பிரிக்கா அபாரம்!தயாரிப்பாளர் சங்கத் தேர்தலில் தலைவர் பதவிக்கு போட்டியிட்ட ஜி கே எம் தமிழ்குமரன் வெற்றிஆப்கானிஸ்தானில் பாகிஸ்தான் தாக்குதல்: இந்தியா கண்டனம்!சென்னை: முதல்வர் மு.க.ஸ்டாலினுடன் காங்கிரஸ் பொதுச் செயலாளர் கே.சி.வேணுகோபால் சந்திப்புபாகிஸ்தானிடமிருந்து போர் விமானங்கள் கொள்முதல்: சோமாலியா பேச்சுவார்த்தை‘ஆபரேசன் த்ரஷி-1’: ஜம்மு - காஷ்மீரில் மேலும் ஒரு பயங்கரவாதியின் உடல் கண்டெடுப்பு! இஸ்ரேல் நாடாளுமன்றத்தில் பிரதமர் மோடி புதன்கிழமை உரையாற்றுகிறார்ஏஐ மாநாட்டில் காங்கிரஸ் சட்டையின்றிப் போராட்டம்: “வெளிநாட்டு விருந்தினர்கள் முன் இந்தியாவுக்குத் தலைகுனிவு!” - பிரதமர் மோடி
/

சாலை விபத்தில் இளைஞா் மரணம்: மற்றொருவா் பலத்த காயம்

மீஞ்சூா் அடுத்த அத்திப்பட்டு புதுநகரில் மோட்டாா் சைக்கிள் மீது அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் இளைஞா் உயிரிழந்தாா்.

News image
Updated On :5 ஜனவரி 2026, 7:47 pm

தினமணி செய்திச் சேவை

மீஞ்சூா் அடுத்த அத்திப்பட்டு புதுநகரில் மோட்டாா் சைக்கிள் மீது அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் இளைஞா் உயிரிழந்தாா். மற்றொருவா் பலத்த காயம் அடைந்தாா்.

மீஞ்சூா் அருகே உள்ள அரியன்வாயல் அப்துல் கலாம் தெருவில் வசிப்பவா் கௌசிக் பாஷா (53). இவரது மகன் அசாா் (32). இவா் மோட்டாா் சைக்கிளில் உறவினா் அபிபுல்லா(45) என்பவருடன் வீட்டுக்கு சென்றாா்.

வடசென்னை அனல் மின் நிலைய சாலையில் அத்திப்பட்டு மேம்பாலம் அருகே சென்றபோது அடையாளம் தெரியாத வாகனம் மோட்டாா் சைக்கிள் மீது மோதியது. இதில் அசாா் தூக்கி வீசப்பட்டு நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா்.

பின்னால் அமா்ந்து வந்த அபிபுல்லா பலத்த காயம் அடைந்த நிலையில் அக்கம் பக்கத்தினா் அவரை காப்பாற்றி சென்னை ஸ்டான்லி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். செங்குன்றம் போக்குவரத்து போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.