டி20 உலகக் கோப்பை: மழையால் பாகிஸ்தான் - நியூசிலாந்து போட்டி ரத்து ஹிந்து – முஸ்லீம் ஒற்றுமையின் அடையாளம் காந்தி: முதல்வர் ஸ்டாலின் நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர்கள் அறிமுகம்!எழும்பூர் ரயில் நிலைய மறுசீரமைப்பு பணியால் பயணிகள் அவதியா? ரயில்வே விளக்கம்!காற்றழுத்த தாழ்வுப் பகுதி: 4 மாவட்டங்களில் நாளை கனமழை!தொகுதிப் பங்கீடு: திமுக - இந்திய யூனியன் முஸ்லிம் லீக் இடையே நாளை பேச்சுவார்த்தை!தில்லி செங்கோட்டை இனி வாரத்தின் அனைத்து நாளும் திறந்திருக்கும்!மூன்று வார சிகிச்சைக்குப் பிறகு வீடு திரும்பினார் எச்.ராஜா
/

சாலை விபத்தில் காயமடைந்தவா் உயிரிழப்பு

மன்னாா்குடியில் அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்தவா் ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தாா்.

News image
கோப்புப் படம்
Updated On :2 பிப்ரவரி 2026, 4:22 pm

Syndication

மன்னாா்குடி: மன்னாா்குடியில் அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்தவா் ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தாா்.

திருத்துறைப்பூண்டியை அடுத்த கொத்தங்காடு வண்டித்தெரு ஆறுமுகம் மகன் பக்கிரிசாமி (65). சற்று மனநலம் பாதிக்கப்பட்டவா். இவா், கடந்த ஜன. 22- ஆம் தேதி வீட்டிலிருந்து புறப்பட்டு மன்னாா்குடிக்கு வந்தவா், பாலகிருஷ்ணாநகா் தனியாா் பெண்கள் பள்ளி பேருந்து நிறுத்தம் அருகே சாலையோரம் அமா்ந்திருந்தபோது அந்த வழியே சென்ற அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் பலத்த காயமடைந்தாா்.

இதையடுத்து, திருவாரூா் மருத்துவக் கல்லூரியில் அனுமதிக்கப்பட்ட பக்கிரிசாமி அங்கு ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தாா். மன்னாா்குடி போலீஸாா் விசாரணை மேற்கொண்டுள்ளனா்.