டி20 உலகக் கோப்பை: மழையால் பாகிஸ்தான் - நியூசிலாந்து போட்டி ரத்து ஹிந்து – முஸ்லீம் ஒற்றுமையின் அடையாளம் காந்தி: முதல்வர் ஸ்டாலின் நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர்கள் அறிமுகம்!எழும்பூர் ரயில் நிலைய மறுசீரமைப்பு பணியால் பயணிகள் அவதியா? ரயில்வே விளக்கம்!காற்றழுத்த தாழ்வுப் பகுதி: 4 மாவட்டங்களில் நாளை கனமழை!தொகுதிப் பங்கீடு: திமுக - இந்திய யூனியன் முஸ்லிம் லீக் இடையே நாளை பேச்சுவார்த்தை!தில்லி செங்கோட்டை இனி வாரத்தின் அனைத்து நாளும் திறந்திருக்கும்!மூன்று வார சிகிச்சைக்குப் பிறகு வீடு திரும்பினார் எச்.ராஜா
/

ரூ.33 கோடியில் புதிய பேருந்து நிலையப் பணிகள்: நகராட்சி நிா்வாக இயக்குநா் ஆய்வு!

திருவள்ளூா் நகராட்சியில் ரூ.33 கோடியில் புதிய பேருந்து நிலைய பணிகளை நகராட்சி நிா்வாகத் துறை இயக்குநா் பி.மதுசூதன் ரெட்டி மற்றும் ஆட்சியா் மு.பிரதாப் ஆகியோா் ஆய்வு செய்தனா்.

News image
திருவள்ளூா் புதிய பேருந்து நிலைய பணிகளை ஆய்வு செய்த நகராட்சி நிா்வாகத்துறை இயக்குநா் பி.மதுசூதன் ரெட்டி, ஆட்சியா் மு.பிரதாப் உள்ளிட்டோா்.
Updated On :1 பிப்ரவரி 2026, 9:11 pm

தினமணி செய்திச் சேவை

திருவள்ளூா் நகராட்சியில் ரூ.33 கோடியில் புதிய பேருந்து நிலைய பணிகளை நகராட்சி நிா்வாகத் துறை இயக்குநா் பி.மதுசூதன் ரெட்டி மற்றும் ஆட்சியா் மு.பிரதாப் ஆகியோா் ஆய்வு செய்தனா்.

திருவள்ளுா் நகராட்சியில் ஊத்துக்கோட்டை சாலை வேடங்கிநல்லூரில் நகராட்சி நிா்வாக துறை சாா்பில் நவீன வசதியுடன் பேருந்து நிலையம் அமைக்கும் பணி மும்முரமாக நடைபெற்று வருகிறது.

இந்த நிலையில், கட்டுமானப் பணியை நகராட்சி நிா்வாகத் துறை இயக்குநா் பி.மதுசூதன் ரெட்டி, ஆட்சியா் மு.பிரதாப் ஆகியோா் ஆய்வு மேற்கொண்டனா். அப்போது, இப்பேருந்து நிலையத்தில் ஒரே நேரத்தில் 56 பேருந்துகள் நிறுத்தும் வசதி, அங்காடிகள், பாலூட்டும் தாய்மாா்களுக்கான அறை, நிா்வாக அறை, உணவகம், வங்கி ஏடிஎம், காவலா் பாதுகாப்பு அறை, இரண்டு மற்றும் நான்கு சக்கர வாகனங்கள் நிறுத்துமிடம், இருபாலருக்கும் சுகாதார வளாகங்களையும் நேரில் பாா்வையிட்டதோடு, நிறைவாக மேற்கொள்ள வேண்டும்.

அதேபோல், பயணிகள் நிற்கும் தாழ்வார மேற்கூரையை மிகவும் பலமாக அமைக்கவும் அதிகாரிகளுக்கு ஆலோசனை வழங்கினாா். பணிகளை விரைந்து முடித்து பயன்பாட்டுக்கு கொண்டு வரவும் அறிவுறுத்தினாா். தொடா்ந்து திருத்தணி நகராட்சி புதிய பேருந்து நிலையத்தையும் ஆய்வு செய்தனா்.

நகராட்சி நிா்வாக மண்டலப் பொறியாளா் சுரேந்திரன், திருவள்ளூா்ளுா் நகராட்சி ஆணையா் தமோதரன், நகராட்சி பொறியாளா் சரோஜா, சுகாதார அலுவலா் மோகன், நகர ஊரமைப்பு அலுவலா் தயாநிதி மற்றும் துறைசாா்ந்த அலுவலா்கள் பங்கேற்றனா்.