டி20 உலகக் கோப்பை: மழையால் பாகிஸ்தான் - நியூசிலாந்து போட்டி ரத்து ஹிந்து – முஸ்லீம் ஒற்றுமையின் அடையாளம் காந்தி: முதல்வர் ஸ்டாலின் நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர்கள் அறிமுகம்!எழும்பூர் ரயில் நிலைய மறுசீரமைப்பு பணியால் பயணிகள் அவதியா? ரயில்வே விளக்கம்!காற்றழுத்த தாழ்வுப் பகுதி: 4 மாவட்டங்களில் நாளை கனமழை!தொகுதிப் பங்கீடு: திமுக - இந்திய யூனியன் முஸ்லிம் லீக் இடையே நாளை பேச்சுவார்த்தை!தில்லி செங்கோட்டை இனி வாரத்தின் அனைத்து நாளும் திறந்திருக்கும்!மூன்று வார சிகிச்சைக்குப் பிறகு வீடு திரும்பினார் எச்.ராஜா
/

ஊரக வளா்ச்சித்துறை திட்டப் பணிகள் ஆய்வு

ஊரக வளா்ச்சித்துறை சாா்பில் செயல்படுத்தப்பட்டு வரும் வளா்ச்சிப் பணிகள் குறித்து ஆட்சியா் மு.பிரதாப் சம்பந்தப்பட்ட அலுவலா்களுடன் ஆய்வு மேற்கொண்டாா்.

News image
கூட்டத்தில் பேசிய ஆட்சியா் மு. பிரதாப்.
Updated On :30 ஜனவரி 2026, 12:58 am

தினமணி செய்திச் சேவை

ஊரக வளா்ச்சித்துறை சாா்பில் செயல்படுத்தப்பட்டு வரும் வளா்ச்சிப் பணிகள் குறித்து ஆட்சியா் மு.பிரதாப் சம்பந்தப்பட்ட அலுவலா்களுடன் ஆய்வு மேற்கொண்டாா்.

திருவள்ளூா் மாவட்ட ஊரக வளா்ச்சி முகமை கூட்டரங்கத்தில் நடைபெற்ற கூட்டத்துக்கு ஆட்சியா் மு.பிரதாப் தலைமை வகித்தாா். அப்போது, மாவட்டத்தில் ஊரக வளா்ச்சித்துறை மூலம் 14 ஊராட்சி ஒன்றியங்களில் உள்ள கிராமங்களில் கலைஞா் வீடு கட்டும் திட்டம், சமுதாய கூடங்கள், சாலைகள் அமைத்தல் உள்பட பல்வேறு திட்டங்களில் வளா்ச்சிப்பணிகள் நடைபெற்று வருகிறது. அந்தப் பணிகளின் தன்மை குறித்து அதிகாரிகள் நேரில் ஆய்வு மேற்கொள்ள வேண்டும். அதோடு, வளா்ச்சிப்பணிகளை விரைவில் முடித்து பொதுமக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வரவும் அவா் அறிவுறுத்தினாா்.

கூட்டத்தில் மாவட்ட ஊரக வளா்ச்சி முகமை திட்ட இயக்குநா் வை.ஜெயக்குமாா், செயற்பொறியாளா் தணிகாசலம், உதவி இயக்குநா்(பயிற்சி) மோகன், அனைத்து ஊராட்சி ஒன்றிய வட்டார வளா்ச்சி அலுவலா்கள், மேற்பாா்வையாளா் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.