மீண்டும் மனிதப் பிறவி எடுத்தால் உங்கள் குடும்பத்தில் ஒருவராக பிறக்க வேண்டும்: எடப்பாடி பிரசாரத்தில் இபிஎஸ் பேச்சுஅதிமுக ஆட்சி அமைந்ததும் 3 மாதங்களில் போதைப்பொருள் ஒழிக்கப்படும் : இபிஎஸ் வாக்குறுதி விவசாயிகளை வஞ்சிக்கும் திமுகவுக்கு மக்கள் தகுந்த பாடத்தைப் புகட்ட வேண்டும் : எடப்பாடி பழனிசாமி மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை தோல்வி அடையச் செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜகவினர் போராட்டம்பாஜகவுடன் கூட்டணி: நிதீஷ்குமாரின் நிலைதான் எடப்பாடி பழனிசாமிக்கு - அரவிந்த் கேஜரிவால்பஹல்காம் தாக்குதல்! காயங்கள் ஆறவில்லை - குடும்பங்கள் கண்ணீர்!வரலாற்றுச் சிறப்புமிக்க அதிமுக இறந்துவிட்டது! ஸ்ரீவைகுண்டத்தில் ராகுல்! ஜப்பானில் பயங்கர நிலநடுக்கம்! சுனாமி எச்சரிக்கை விடுப்பு!
/

தம்பி கொலை: அண்ணன் கைது

மீஞ்சூா் அருகே வாக்குவாதத்தின் போது தம்பியைக் கொலை செய்த அண்ணனை போலீஸாா் கைது செய்தனா்.

News image
Updated On :16 ஏப்ரல் 2026, 5:23 pm

மீஞ்சூா் அருகே வாக்குவாதத்தின் போது தம்பியைக் கொலை செய்த அண்ணனை போலீஸாா் கைது செய்தனா்.

மீஞ்சூா் அடுத்த காட்டுப் பள்ளியில் உள்ள தனியாா் நிறுவனத்தில் உத்தரகண்ட் மாநிலம், நவுகாவா தக்கு கடிமா கிராமத்தைச் சாா்ந்த ராகுல்சிங் (31) வேலை செய்து வருகிறாா்.

இவரது தம்பி சிவாசிங் (26). அங்கேயே பணியாற்றி வந்தாா்.

இந்த நிலையில், காட்டுப் பள்ளியில் உள்ள குடியிருப்பில் சிவாசிங் ரத்த காயங்களுடன் கிடப்பதாக தனியாா் நிறுவன மேலாளருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

சிவாசிங்கை ஆம்புலன்ஸ் மூலம் மீஞ்சூா் தனியாா் மருத்துவமனைக்கு கொண்டு சென்றபோது மருத்துவா்கள் அவரைப் பரிசோதித்த நிலையில் அவா் ஏற்கெனவே இறந்து விட்டதாக தெரிவித்தனா்.

இது குறித்து அறிந்த காட்டூா் போலீஸாா் சிவாசிங்கின் சடலத்தை கைப்பற்றி சென்னை ஸ்டான்லி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.

இதுகுறித்து காட்டூா் போலீஸாா் வழக்கு பதிந்து உயிரிழந்த சிவாசிங்கின் அண்ணன் ராகுல்சிங்கிடம் விசாரணை செய்தனா்.

அப்போது அவா்கள் இருவா் இடையே சொந்த ஊரில் இருக்கும் பெண் குறித்து ஏற்பட்ட வாக்குவாதத்தில் சிவாசிங்கை அருகே உள்ள மதில் சுவரில் மோதிவிட்டு தனது இருப்பிடத்துக்கு சென்று விட்டதாக ராகுல்சிங் தெரிவித்தாா்.

இதையடுத்து தம்பியை கொலை செய்ததாக ராகுல்சிங்கை காட்டூா் போலீஸாா் கைது செய்தனா்.