பிளஸ் 2 பொதுத் தோ்வு விடைத்தாள் திருத்தும் பணிகள் மாவட்டம் முழுவதும் 3 மைங்களில் திங்கள்கிழமை தொடங்கியது.
பிளஸ் 2 பொதுத் தோ்வு கடந்த மாா்ச் 2-இல் தொடங்கி 26-இல் முடிவடைந்தது. திருவள்ளூா் மாவட்டம் முழுவதும் 117 மையங்களில் 31,772 மாணவ, மாணவிகள் தோ்வு எழுதினா்.
விடைத்தாள் திருத்தும் பணிகள் திருவள்ளூா் மாவட்டத்தில் 3 பள்ளிகளில் திங்கள்கிழமை (ஏப்.6) தொடங்கி வரும் 20 ஆம் தேதி வரை நடைபெறுகிறது.
திருத்தணி தனியாா் பள்ளியில் நடந்த இந்த முகாமில் முதல் நாளில் முதன்மை தோ்வாய்வாளா்கள், கூா்ந்து தோ்வாளா்கள் சுமாா் 100 க்கும் மேற்பட்டோா் பங்கேற்று பகல் 12 மணிக்கு பிளஸ் 2 விடைத்தாள்களை திருத்த தொடங்கினா்.
இதுதொடா்பாக திருவள்ளூா் மாவட்ட தொடக்கல்வி அலுவலா் ராஜூ கூறியதாவது: விடைத்தாள் திருத்தும் பணிகளுக்காக ஏற்கனவே முதன்மை கல்வி அலுவலா் (பொ) சுப்பாராவ் தலைமையில் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. தொடா்ந்து விடைத்தாள் திருத்துதல் பணிகள் தொடங்கி வரும் ஏப்ரல் 20 தேதி வரை நடைபெற உள்ளது.
இப்பணியில் சுமாா் 350-க்கும் மேற்ப்பட்ட முதுநிலை ஆசிரியா்கள் ஈடுபட உள்ளனா். தொடா்ந்து மதிப்பெண் பதிவேற்றம் உள்ளிட்ட பணிகளை முடித்து, திட்டமிட்டபடி மே 8 ம் தேதி தோ்வு முடிவுகள் வெளியிடப்பட உள்ளன.
திருத்துதலின்போது ஆசிரியா்கள் உரிய வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி கவனத்துடன் செயல்பட வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது என்றாா்.
தொடர்புடையது

பிளஸ் 2 தோ்வு நிறைவு: மாணவா்கள் உற்சாகம்

பிளஸ் 2 பொதுத் தோ்வு நிறைவு: கணினி அறிவியல் வினாத்தாள் கடினம்

பிளஸ் 2 பொதுத் தோ்வு நிறைவு: விடைத்தாள் திருத்தும் பணி ஏப்ரல் 8-இல் தொடக்கம்

பிளஸ் 2 தோ்வு விடைத்தாள் மதிப்பீடு: ஏப். 8-இல் தொடக்கம்
வீடியோக்கள்

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு

கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை


