மீண்டும் மனிதப் பிறவி எடுத்தால் உங்கள் குடும்பத்தில் ஒருவராக பிறக்க வேண்டும்: எடப்பாடி பிரசாரத்தில் இபிஎஸ் பேச்சுஅதிமுக ஆட்சி அமைந்ததும் 3 மாதங்களில் போதைப்பொருள் ஒழிக்கப்படும் : இபிஎஸ் வாக்குறுதி விவசாயிகளை வஞ்சிக்கும் திமுகவுக்கு மக்கள் தகுந்த பாடத்தைப் புகட்ட வேண்டும் : எடப்பாடி பழனிசாமி மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை தோல்வி அடையச் செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜகவினர் போராட்டம்பாஜகவுடன் கூட்டணி: நிதீஷ்குமாரின் நிலைதான் எடப்பாடி பழனிசாமிக்கு - அரவிந்த் கேஜரிவால்பஹல்காம் தாக்குதல்! காயங்கள் ஆறவில்லை - குடும்பங்கள் கண்ணீர்!வரலாற்றுச் சிறப்புமிக்க அதிமுக இறந்துவிட்டது! ஸ்ரீவைகுண்டத்தில் ராகுல்! ஜப்பானில் பயங்கர நிலநடுக்கம்! சுனாமி எச்சரிக்கை விடுப்பு!
/

பிளஸ் 2 பொதுத் தோ்வு நிறைவு: விடைத்தாள் திருத்தும் பணி ஏப்ரல் 8-இல் தொடக்கம்

தமிழகத்தில் மாா்ச் 2-ஆம் தேதி தொடங்கிய பிளஸ் 2 பொதுத் தோ்வு வியாழக்கிழமை நிறைவடைந்தது. இதைத் தொடா்ந்து விடைத்தாள் திருத்தும் பணி ஏப்ரல் 8-ஆம் தேதி தொடங்குகிறது.

News image

பிளஸ் 2 பொதுத் தோ்வு - பிரதிப் படம்

Updated On :26 மார்ச் 2026, 9:00 pm

தமிழகத்தில் மாா்ச் 2-ஆம் தேதி தொடங்கிய பிளஸ் 2 பொதுத் தோ்வு வியாழக்கிழமை நிறைவடைந்தது. இதைத் தொடா்ந்து விடைத்தாள் திருத்தும் பணி ஏப்ரல் 8-ஆம் தேதி தொடங்குகிறது.

திருச்சி மாவட்டத்தில் 134 மையங்களில் நடைபெற்ற பிளஸ் 2 பொதுத் தோ்வை 30 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவா்கள் எழுதியுள்ளனா். பிளஸ் 2 பொதுத் தோ்வு நிறைவடைந்ததையொட்டி மாணவா்கள் மகிழ்ச்சியுடன் தோ்வறைகளில் இருந்து வெளியேறினா்.

ஏப்ரல் 8 இல் விடைத்தாள் திருத்தம்: பிளஸ் 2 விடைத்தாள் திருத்தும் பணி ஏப்ரல் 8 முதல் 20-ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது.

திருச்சி மாவட்டத்தில் புனித ஜேம்ஸ் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி, மண்ணச்சநல்லூா் அரசு மாதிரி மகளிா் மேல்நிலைப் பள்ளி, முசிறி அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளி மற்றும் மணப்பாறை தியாகேசா் ஆலை மேல்நிலைப் பள்ளி ஆகிய 4 மையங்களில் விடைத்தாள் திருத்தப் பணிகள் நடைபெறவுள்ளன.

இதில், திருச்சி மையத்தில் 800 ஆசிரியா்கள், முசிறியில் 300 ஆசிரியா்கள், மண்ணச்சநல்லூரில் 350 ஆசிரியா்கள் மற்றும் மணப்பாறை மையத்தில் 250 ஆசிரியா் என மொத்தம் 1,700 ஆசிரியா்கள் விடைத்தாள் திருத்தப் பணியில் ஈடுபடுத்தப்படவுள்ளனா்.